நொய்டா: பணி ஓய்வுபெற்ற பிறகு, ஓய்வுகாலத்தை உபயோகமுள்ளதாக மாற்ற நினைத்து மாதந்தோறும் ரூ.3.5 லட்சம் வருவாய் ஈட்டுகிறார் ரமேஷ். குங்குமப்பூ அதிக விலை கொண்டது. ஒரு கிலோ குங்குமப்பூ லட்சக்கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது. வீட்டிலேயே அதை உற்பத்தி செய்து வருகிறார் நொய்டாவை சேர்ந்த ரமேஷ்.
1980 ஆம் ஆண்டு என் ஐ டி குருஷேத்ராவில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பயின்ற ரமேஷ் 30 ஆண்டுகளாக பல்வேறு நிறுவனங்களில் பணி செய்துள்ளார். பணி நிமித்தமாக பல்வேறு இடங்களுக்கு அவர் பயணம் செய்துள்ளார்.

அப்படி 2002 ஆம் ஆண்டு அவர் தென்கொரியாவிற்கு பணி நிமித்தமாக சென்று ஆறு மாதம் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு ஹைட்ரோபோனிக் மைக்ரோ கிறீன் மற்றும் குங்குமப்பூ விவசாயம் குறித்த விழிப்புணர்வு கிடைத்தது.
இந்தியா திரும்பிய அவர் இந்தியா தன்னுடைய தேவையில் 70% குங்குமப்பூவை ஈரானிலிருந்து இறக்குமதி செய்வதை அறிந்தார். காஷ்மீரில் விளையும் குங்குமப்பூ 30% தேவையை மட்டுமே பூர்த்தி செய்கிறது.
இந்தியாவில் குங்குமப்பூவிற்கான தேவை அதிகரித்திருப்பதும் ஆனால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் இருப்பதையும் அவர் உணர்ந்து கொண்டார். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் குங்குமப்பூ விவசாயத்தை கையில் எடுத்தார்.
2017ஆம் ஆண்டு தன்னுடைய வீட்டில் 100 அடி கொண்ட அறையில் குங்குமப்பூ விவசாயத்தை செய்யத் தொடங்கினார். இதற்காக 4 லட்சம் ரூபாய் செலவு செய்த அவர் தன்னுடைய வீட்டில் குங்குமப்பூவை விளைவிப்பதற்கு ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்கினார்.
மேலும் 2 லட்சம் ரூபாய்க்கு காஷ்மீரில் இருந்து குங்குமப்பூ விதைகளை வாங்கினார். இது தவிர அறையில் குறிப்பிட்ட காலநிலை நிலவுவதற்கு ஏற்ப மின்சார சாதனங்களை அமைப்பது உள்ளிட்டவற்றிற்காக மாதுந்தோறும் 4,500 செலவாகும் என கூறுகிறார்.
குங்குமப்பூவை பொறுத்தவரை சந்தையில் நல்ல விலைக்கு செல்கிறது எனக் கூறும் அவர் ஹோல்சேல் மார்க்கெட்டில் ஒரு கிலோவை 2.5 லட்சம் ரூபாய்க்கும் ரீடெயில் சந்தையில் ஒரு கிலோவை 3.5 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்ய முடியும் என கூறுகிறார்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக இருந்தால் ஒரு கிலோ குங்குமப் பூவை 6 லட்சம் ரூபாய் வரை விற்கலாம் என்கிறார். தற்போது இதன் மூலம் நல்ல வருவாய் கிடைப்பதாகவும் மாதத்திற்கு 3.5 லட்சம் என வருவாய் ஈட்டுவதாகவும் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.
தற்போது ரமேஷ் வீட்டிலேயே குங்குமப்பூ விவசாயம் செய்வது குறித்து பயிற்சி நிலையம் அமைத்து பயிற்சி அளித்து வருகிறார். நொய்டாவில் உள்ள அகார்சார்க் சேஃப்ரான் இன்ஸ்டியூட் என்ற பெயரில் நடத்தி வரும் பயிற்சி நிலையத்தில், இதுவரை 370 பேருக்கு அவர் பயிற்சி அளித்து இருப்பதாகவும் இரண்டு நாட்களுக்கு இந்த பயிற்சி வகுப்பு நடைபெறும் என்றும் கூறுகிறார். இதன் இந்த பயிற்சிக்கான கட்டணம் 12 ஆயிரம் ரூபாயாகும்.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications