ஒரு சின்ன ஹோட்டலில் புரோட்டா மாஸ்டர் பணி செய்யும் ஊழியர் கூட தினமும் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்.
ஆனால் அலுவலகம் சென்று ஒயிட் காலர் பணியில் இருக்கும் ஊழியர்கள் அதைவிட பாதிதான் பலர் சம்பாதிக்கின்றனர் என்ற புள்ளிவிவரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
65 சதவீத இந்தியர்களின் சராசரி சம்பளம் வெறும் ரூபாய் 15,000 மட்டுமே என்ற தகவல் ஆய்வறிக்கையில் கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்தியர்களின் சம்பளம்
இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு ஒயிட் காலர் ஜாப் என்று கூறப்படும் அலுவலக பணியாளர்கள் மாதம் 15,000 ரூபாய் அல்லது அதற்கும் குறைவாக சம்பளம் வாங்குவதாக ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. சம்பளம் மேலாண்மை செயலியான Salary box என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் 65% இந்தியர்கள் சராசரியாக ரூ.15000 மட்டுமே சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளது.
ஆண்கள், பெண்கள் சம்பளம்
இந்தியாவில் உள்ள பெரும்பாலான பெண்கள் சராசரியாக மாதம் ஒன்றுக்கு ரூ. 12,398 சம்பாதிக்கின்றனர் என்றும் ஆண்கள் சராசரியாக 15 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கின்றனர் என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவை பொறுத்தவரை தொழிலாளர்களில் 27 சதவீதம் மட்டுமே பெண்கள் உள்ளனர் என்றும் 73% ஆண்கள்தான் ஊழியர்களாக உள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சராசரி சம்பளம்
இந்திய ஊழியர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே மாதம் ஒன்றுக்கு ரூ.20,000-40,000 (சராசரியாக ரூ. 25,000) வருமானம் ஈட்டுகிறார்கள் என்றும், பெரும்பான்மையான இந்தியர்கள் வாழத் தகுந்த இடத்தை பாதுகாப்பதில் கூட சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச சம்பளம்
இந்தியாவில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் மத்திய ஊதியக் குழு நிர்ணயித்த குறைந்தபட்ச சம்பளத்தை மட்டுமே தங்களது ஊழியர்களுக்கு வழங்கி வருகின்றன என்றும் அதாவது மாதம் ஒன்றுக்கு 18 ஆயிரம் ரூபாய் மட்டுமே நாடு முழுவதிலுமுள்ள 850 மாவட்டங்களில் பணிபுரியும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பணியாளர்கள் சம்பளமாக பெற்று வருகிறார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரூ.9000 மட்டுமே சம்பளம்
பல்பொருள் அங்காடிகள், மளிகை கடைகள், ஜவுளி கடைகள் போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் 8000 ரூபாய் முதல் 9,000 ரூபாய் வரை மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது என்பதும் ஆய்வறிக்கையில் உள்ள அதிர்ச்சிக்குரிய தகவல் ஆகும்.
ஐடி நிறுவனம்
போக்குவரத்து, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தையல் நிறுவனங்கள் ஆகியவை தான் ஊழியர்களுக்கு ஓரளவு அதிக ஊதியம் வழங்கி வருகிறது என்றும் ஐடி நிறுவனத்தின் பணியாளர்களுக்கும் நல்ல சம்பளம் கிடைத்து வருவதாகவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆரம்பநிலை ஊழியர்கள்
ஆரம்பகட்டத்தில் வேலைவாய்ப்பில் நுழையும் இளைஞர்களின் மாத சம்பளம் மிகவும் குறைவாகவே உள்ளது என்றும் இந்தியாவில் பெரும்பான்மையான ஆரம்பநிலை ஊழியர்கள் மிகக்குறைந்த சம்பளம் பெற்று வருகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடும்ப சூழல்
பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் இந்த குறைந்த சம்பளத்தை வைத்து அவர்கள் தங்கள் குடும்பத்தை நடத்த முடியாத சூழல் தான் இருக்கிறது என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த தொழில்
புரோட்டா கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள், நடைபாதையில் தள்ளுவண்டியில் பழங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் சம்பாதிப்பதை விட பாதி வருமானம்தான் ஒயிட் கலர் ஜாப் என்று கூறிக்கொள்ளும் அலுவலகத்துக்கு செல்லும் ஊழியர்களின் வருமானம் உள்ளது என்றும், எவ்வளவு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்தாலும் சின்ன தொழிலாக இருந்தாலும் சொந்த தொழிலுக்கு ஈடு இணை இல்லை என்றும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தொழிலதிபர்களாகும் இளைஞர்கள்
அதனால் தான் தற்போது உள்ள இளைஞர்களுக்கு நிறுவனங்களில் மாத சம்பளமாக பணி செய்யும் ஆர்வம் குறைந்துவிட்டது என்றும் பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் ரிஸ்க் எடுத்து சொந்தத் தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேறி வருகின்றனர் என்றும் கூறப்பட்டு வருகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications