ஷாஜகான் மகள் முதல் கிளியோபாட்ரா வரை.. வரலாற்றில் முக்கியமான 7 பேரரசிகள்..!

வரலாறுச் சுவடுகளில் சில ராணிகள் தங்களுக்கென தனி ராஜ்ஜியம் அமைத்து ஆதிக்கம் செலுத்தி வந்ததைப் பார்க்க முடிகிறது. இறையாண்மையுடன் தனித்து நிலைத்து ஆட்சி செய்திருக்கிறார்கள். பெரும்பாலும் அதிகாரத்தின் ஓரங்கட்டப்பட்ட சகாப்தத்தில், இந்தப் பெண்கள் அசாதாரண ராணிகளாக தடைக்கற்களை உடைத்து வலிமை, ஞானம் மற்றும் முற்போக்கான தலைமையின் கலங்கரை விளக்கங்களாக உயர்ந்தனர்.

மரபுகளை மீறி, சமூக எதிர்பார்ப்புகளை மீறி, அசைக்க முடியாத கரத்துடன் ஆட்சி செய்து, அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு பாலினம் தடையில்லை என்பதை நிரூபித்தார்கள். வரலாற்றில், ஆண்களின் பெயர்கள் தடிமனான எழுத்துக்களில் பொறிக்கப்பட்டன. ஆனால் நிழலில் இருந்து பல பேரரசுகளை வடிவமைத்த பெண்களின் அசாதாரண கதைகளை வெளிக்கொணரும் நேரம் இது.

ஷாஜகான் மகள் முதல்  கிளியோபாட்ரா வரை.. வரலாற்றில் முக்கியமான 7 பேரரசிகள்..!

அவர்களின் ஞானம், புத்திசாலித்தனம் சிம்மாசனத்தின் பின்னால் உண்மையான சக்தியாக மாறியது. இந்த பெண்கள் சமூக விதிமுறைகளை மீறி, தடைகளை உடைத்து, வணிகத்திலும் நிர்வாகத்திலும் இணையற்ற புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தினர்.

தங்கள் பெயரை வரலாற்றில் பதித்து, உலகையே மாற்றியமைத்து, வருங்கால தலைமுறையினரைத் தூண்டி, வாய்ப்புக் கிடைத்தால், பெண்கள் பொருந்தவில்லை என்பதை நிரூபித்த முதல் ஏழு வணிகப் பெண்களையும், சக்தி வாய்ந்த மனதையும் கொண்டாடும் ராணிகளின் அசைக்க முடியாத உணர்வை இங்கு கொண்டாடுகிறோம்.

1. கதீஜா பின்த் குவைலித்: வணிக ராணி
6ஆவது நூற்றாண்டில் மெக்காவின் சந்தையில் கதீஜா பின்த் குவைலித் தலைசிறந்த தொழில் அதிபராக பெயர் பெற்றார். கணவரை இழந்த நிலையில் அவர் விட்டுச் சென்ற வணிக நிறுவனத்தை கதீஜா நிர்வாகம் செய்ய வேண்டியிருந்தது.

தனது புத்திசாலித்தனத்தால் தொலைதூரம் உள்ள வியாபாரத் தொடர்புகளை சிறப்பாகச் செய்து வியாபாரத் தடங்களையும் நன்கு அறிந்து வைத்திருந்தார். கேரவான்களை நிர்வகிப்பதிலும் லாபத்துகான பேரங்களை சிறப்பாகச் செய்து முடிப்பதில் ஆண்களை மிஞ்சினார் கதீஜா. அவரது வெற்றி எதிர்காலத்தில் பெண்களின் பொருளாதார நிலையை உறுதி செய்வதற்காக வியாபாரத்தில் துணிந்து இயங்குவதற்கான உத்வேகத்தைத் தந்தது.

அவரது கேரவான் வணிகத்தின் மூலம் கண்டங்களைக் கடந்து அவரது செல்வாக்கும் வெற்றியும் பரவியது. நபிகள் நாயகமாக பின்னர் மாறிய முகமுத இபின் அப்துல்லாவுடன் கதீஜா கூட்டு சேர்ந்து தனது நிலையை சிறப்பித்தார்.

2. ஜஹானாரா பேகம்: கருணையின் பேரரசி
17ஆவது நூற்றாண்டில் இந்தியாவில் முகலாயப் பேரரசு ஆட்சி செய்தபோது பேரரசர் ஷாஜகானின் மூத்த மகளான ஜஹானாரா பேகம் புத்திசாலித்தனத்திலும் பாசத்துக்கும் பேர் பெற்றார். பேரரசின் கட்டடக் கலையின் பின்புலமாக இருந்த பேகம் அரண்மனை கஜானாவை நிர்வகித்து பல நலத் திட்டங்களை செயல்படுத்தினார்.

புலவர்கள் கலைஞர்களை போற்றினார். எண்ணற்ற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் கல்வியறிவை வளர்த்ததிலும் குறிப்பிட்ட பங்கை வகித்த ஜஹானாரா பேகம் கருணையின் பேரரசி என்று வருனிக்கப்பட்டார்.

3. கேத்தரின் டி மெடிசி: ராணி ரீஜண்ட்
பிரெஞ்சு மதவாத போர்க்காலத்தில் கேத்தரீன் டி மெடிசி தலைசிறந்த சக்தியாக உருவெடுத்தார். பிரான்ஸ் ரீஜண்ட் மகாராணியான மெடிசி 16ஆவது நூற்றாண்டில் அரசியல் களத்தில் நிதானமாகக் களமாடினார். அரசியல் ஞானத்தின் மூலம் தனது நாட்டின் குடிமக்களையும் குழந்தைகளையும் காப்பாற்றினார். கலை, அறிவியல், வியாபாரம் ஆகியவற்றில் பெண்ணின் தலைமையை போற்றும்வகையில் செயல்பட்டார்.

4. எகிப்தின் 7ஆவது கிளியோபாட்ரா
எகிப்தின் பாரோவாக பதவியேற்ற 7ஆவது கிளியோபாட்ரா கவர்ச்சிகரமாகவும் கூர்மையான அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார். மக்களை ஒருங்கிணைத்தபின் ரோம் நாட்டு உறவுகளைத் துண்டித்தார். அரசியலில் துணிந்து செயல்பட்டார். பால் பாகுபாடுகளை வென்றார். கருணையுடன் ஆட்சி செய்தார்.

ஜூலியஸ் சீசரை மகனாகப் பெற்றெடுத்த கிளியோபாட்ரா பின்னர் தனது சாம்ராஜ்ஜியத்தைக் காப்பதற்காக மார்க் ஆன்டனியை திருமணம் செய்து கொண்டார்.

5. வூ ஜெடியன்- பேரரசி இறையாண்மை
பண்டைய சீனாவில் பேரரசி வூ ஜெடியன் மரபுகளை மீறி ஒரே பெண் இறையாண்மையாக சீன வரலாற்றில் கோலோச்சினார். 7ஆவது நூற்றாண்டில் தந்தை மரபு கட்டுப்பாடுகளை தகர்த்தார். டாங் பேரரசை உருவாக்கினார். அவரது அரசியல் நிர்வாகம், ராணுவ உத்திகள், நிர்வாக மேலாண்மை மூலம் செல்வச்செழிப்பான காலத்தையும் நிலையான ஆட்சியையும் தந்தார்.

பேரரசி வூவின் தொலைநோக்கான கொள்கைகள் கல்வியையும் சமத்துவத்தையும் வளர்த்தது. தேசம் என்பது அனைத்து குடிமகன்களும் பால் பாகுபாடு வேறுபாடு இல்லாமல் இருந்தால்தான் சிறக்கும் என்பதை நிரூபித்தார்.

6. இங்கிலாந்தின் ராணி எலிசபெத் I (1533-1603)
மறுமலர்ச்சிக் காலத்தின்போது எலிசபெத் 1 ஆங்கில ஆட்சி பீடத்தில் ஏறினார். அப்போது மிகப்பெரும் அரசியல் மற்றும் மதவாத சூறாவளி நிலவியது. 45 வயதான எலிசபெத் 1 காலத்தில் கலாசாரம் சீரும் சிறப்புமாக விளங்கியது.

ஸ்பானிய அர்மாடாக்களுக்கு எதிராக எலிசபெத்தின் இங்கிலாந்து படை மிகவும் வலுவாக இருந்தது. கன்னி ராணியான எலிசபெத் அரசியலில் திறம்பட செயல்பட்டார். அவரது மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். இதனால் அவர் மிகவும் புகழ்பெற்ற ராணியானார்.

7. டெல்லியின் ரஸியா சுல்தான்
இந்தியாவில் 13ஆவது நூற்றாண்டில் முதல் முஸ்லிம் ஆட்சியாளராக ரஜியா சுல்தான் விளங்கினார். போர்க்களத்தில் பயப்படாமல் செயல்பட்டு ஆட்சியில் நிலைத்தன்மையும் செல்வாக்கையும் கொண்டு வந்தார். அவரது ஆட்சி எதிர்கால பெண்கள் சமுதாயத்துக்கு நல்லதொரு முன்னோடியாக இருந்தது.

இந்தப் பெண்களின் அசாத்திய திறமைகளால் வலிமை என்பது பால் பாகுபாடு அறியாது என்பதை நிரூபித்தது. அவர்களது தீறம், தலைமை எல்லாம் அடக்குமுறைகளின் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்தன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+