ஐடி துறையில் சமீபத்திய காலமாக பணி நீக்கம் என்பது மோசமான அளவில் இருந்து வருகின்றது. இந்த போக்கு இன்னும் சில காலம் தொடரலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது.
இது குறித்து நாஸ்காம் மற்றும் வேலை தேடும் தளமான இண்டீட் நடத்திய ஆய்வில், இன்றைய இளைஞர்கள் மத்தியில் வேலை எனும்போது டெக் துறையிலேயே அதிகம் வேலை தேடுவதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வானது மிகப்பெரிய அளவில் பணி நீக்கம் இருந்து வரும் நிலையில் வந்துள்ளது. என்னதான் பணி நீக்கம் இருந்தாலும், சம்பள குறைப்பு என பல சவால்கள் இருந்தாலும் ஐடி துறையின் மீதான மோகம் என்பது மட்டும் குறையவில்லை என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு எனலாம்.
டெக் துறையில் விருப்பம்
இந்த ஆய்வில் கலந்து கொண்ட 70% பேர் டெக் துறையில் தான் விருப்பம் தெரிவித்துள்ளனராம். இந்த ஆய்வில் 79% பேர் சரியானதொரு வாய்ப்பினை நிறுவனங்கள் வழங்கினால் 2 ஆண்டுகளுக்கும் மேலாக, தங்களது வேலையில் இருக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
2022ம் நிதியாண்டில் இந்தியாவின் டெக் துறையில் 3,80,000-க்கும் அதிமான பிரெஷ்ஷர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஐடி நிறுவனங்களின் திட்டம் என்ன?
நாஸ்காமின் மூத்த துணைத் தலைவரும், தலைமை வியூக அதிகாரியுமான சங்கீதா குப்தா கூறுகையில், பணியிடங்களும் பணியாளர்களும் மாறி வருகிறார்கள். எனினும் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள நிறுவனங்கள் புதிய திட்டங்கள், ஊழியர்களின் திறனை அதிகரிக்க புதிய புதிய கோர்ஸ்கள் என பலவற்றையும் நிறுவனங்களும் கையாண்டு வருகின்றன. இது ஐடி துறையில் திறன் வாய்ந்த ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ளவும், ஐடி துறையில் புதியதாக ஒரு வடிவத்தினை கொடுக்கவும் பயன்படும் எனலாம்.
ஹைபிரிட் மாடல் பணி
தொடந்து தேவையானது அதிகரித்து வரும் நிலையில் ஐடி நிறுவனங்கள் ஏற்கனவே வீட்டில் இருந்து பணிபுரியவும், ஹைபிரிட் மாடல் பணியினையும் அனுமதித்துள்ளன. இந்த ஆய்வில் Gen Z பிரிவில் (1997 - 2012ல் பிறந்தவர்கள்) அதிகளவில் அலுவலகத்தில் இருந்து பணியாற்ற விரும்புவதாகவும், 85% பேர் அலுவலகம் மற்றும் வீட்டில் இருந்து பணியாற்றும் கலப்பின பணியினை விரும்புவதாகவும் கூறியுள்ளது.
ஒர்க் லைப் பேலன்ஸ்
Gen Z ஊழியர்கள் பெரும்பாலும் தங்களது ஒர்க் லைப் பேலன்ஸை சரியாக வைத்துக் கொள்ளவே நினைக்கின்றனர். மொத்தத்தில் வேலை குடும்பம் என இரண்டையும் சரியாக கையாள நினைக்கின்றனர்.
நிறுவனங்களும் தேவையை தொடர்ந்து ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள பற்பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதன் மூலம் அட்ரிஷன் விகிதத்தினை தக்க வைத்து கொள்ள முயல்கின்றன.
பணி நீக்கம்
ஐடி துறையினை பொறுத்தவரையில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில்,பணி நீக்கம் என்பது இருந்து வருகின்றது, இந்தபோக்கு இன்னும் சிறிது காலத்திற்கு நீடிக்கலாம் என்றாலும், பற்பல துறைகளிலும் டிஜிட்டல் தேவையானது அதிகரிக்கலாம். இது மேற்கொண்டு இந்த துறையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். அதுவரையில் ஐடி துறையில் சில ஏற்றத் தாழ்வுகள் இருக்கலாம்.
இது ஒரு சுழற்சி தான்
சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று ஐடி துறையில் இது ஒரு சுழற்சி தான். இது எப்போதும் இருப்பது தான். ஆக இது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை, விரைவில் ஐடி துறையானது மீண்டும் வரும். அப்போது பணியமர்த்தல் அதிகரிக்கும். இது ஐடி துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியல்ல. உலகம் முழுக்க நிலவி வரும் மெதுவான வளர்ச்சி, மந்த நிலை அச்சத்தின் மத்தியில் சரிவினைக் கண்டு வருகின்றது. ஆக இந்த நிலை மாறும்போது நிச்சயம் ஐடி துறையிலும் வளர்ச்சி காணும். அதுவரையில் இதுபோன்ற ஏற்ற தாழ்வுகள் என்பது சகஜம் என்றும் கூறியிருந்தது.
பணியமர்த்தல் அதிகரிக்கும்
இந்த அறிக்கையின் வெளிப்பாடு தான் இந்த ஆய்வு என்றும் கூறலாம்,. ஏனெனில் என்னதான் பிரச்சனை என்றாலும், ஐடி துறையின் மீதான ஆர்வம் என்பது குறைந்ததாக தெரியவில்லை. சமீபத்திய ஆய்வொன்று ஐடி துறையில் நடப்பு ஆண்டில் பற்பல சவால்கள் இருந்து வந்தாலும், மறுபுறம் பணியமர்த்தல் என்பது அடுத்த ஆண்டு அதிகரிக்கும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications