இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனத்தை நிறுவியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான இன்போசிஸ் நாராயண மூர்த்தி 3one4 Capital என்னும் வென்சர் கேப்பிடல் நிறுவனத்தின் தி ரெக்கார்ட் என்னும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய போது இந்தியாவின் இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணிநேரம் பணியாற்ற வேண்டும் என்று பேசியது பெரும் சர்ச்சையானது.
இதற்கு தொழிற்துறையை சேர்ந்த பலர் சாதகமாக பதில் அளித்த நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாக இருக்கும் ஓலா-வின் சிஇஓ பாவிஷ் அகர்வால் டிவிட்டரில் முக்கியமான பதிவை இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் 70 மணிநேர பணி தொடர்பாக தெரிவித்துள்ளார்.

பாவிஷ் அகர்வால் டிவிட்டரில் நமது தாத்தா காலத்தில் சுதந்திர தினத்திற்காக பாடுப்பட்டனர், அப்பா காலத்தில் உணவு, வீடு உள்ளிட்ட அத்தியாவசியமான விஷயங்களுக்காக பாடுப்பட்டனர். அதேபோல பிடிக்கிறதோ இல்லையோ இந்த தலைமுறையினர் கடுமையாக உழைத்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற பாடுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
எல்லோரும் அனைத்து விதிமான முயற்சிகளையும் எடுக்க வேண்டும், இந்த பயணத்தில் நாம் இருக்கிறோம் என்பதே விடவும் பெரிய மனநிறைவு இருக்க முடியாது என பாவிஷ் அகர்வால் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதியியல் அதிகாரியான டிவி மோகன்தாஸ் பாய் தொகுத்த தி ரெக்கார்ட் நிகழ்ச்சியில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி இன்றைய இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக தினமும் 12- 14 மணிநேரம் என வாரத்திற்கு 70 மணிநேரம் கடினமாக உழைக்க வேண்டும், அப்போது தான் கடின உழைப்புக்கு பெயர்போன் சீனா போல் உயர முடியும்.

இதன் மூலம் இந்தியாவின் மரியாதை உயர்வது மட்டும் அல்லாமல், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக 2வது அல்லது 3வது இடத்திற்கு உயர முடியும் என பேசினார். நாராயணமூர்த்தி-யின் பேச்சுக்கு பல தொழிலதிபர்கள், தலைவர்கள், ஸ்டார்ட்அப் சிஇஓ-க்கள் பெரிய அளவில் ஆதரவு தெரிவித்தது கூடுதல் அதிர்ச்சியை கொடுத்தது.
இந்த நிவையில் மோகன்தாஸ் பாய், நாராயண மூர்த்தி கருத்தை நிருபிக்க மோகன்தாஸ் பாஸ் 2019 பைம்யூஸ் சர்வே தரவுகளை அடிப்படையாக எடுத்து இந்தியாவில் 15 முதல் 59 வயது வரையில் இருக்கும் நகரத்து ஆண்களின் சாரசரி வார பணிநேரம் 61.6 மணிநேரமாக உள்ளது.
நாராயண மூர்த்தி கூறும் வாரத்திற்கு 70 மணிநேர பணி நேரம் என்பது 30 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கானது, செழிப்பான வளர்ச்சிக்கு கடின உழைப்பு தேவை என்பதை இந்த டேட்டா காட்டுகிறது என டிவீட் செய்துள்ளார்.
நாராயண மூர்த்தியின் 70 மணிநேரம் பணி குறித்துக்கு அவருடைய மனைவி சுதா மூர்த்தி கூறுகையில் மூர்த்தி வாரத்திற்கு 80 -90 மணிநேரம் வேலை பார்க்க கூடியவர், அதற்கு குறைவாக அவர் பணியாற்றியதே கிடையாது. அவர் எப்போது கடுமையாக உழைப்பை நம்புபவர் மற்றும் அப்படியே வாழ்ந்தவர். அவருக்கு தோன்றியதை தான் அவர் பேசினார் என சுதா மூர்த்தி .
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications