கட்டண உயர்வு மற்றும் பணவீக்கம் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 70 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து உள்ளதாக டிராய் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 70 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து உள்ளன. இதற்கு முக்கிய காரணம் கட்டண உயர்வு என்று கூறப்பட்டாலும் பணவீக்கமும் இன்னொரு காரணமாக கூறப்பட்டு வருகிறது.
70 லட்சம் வாடிக்கையாளர்கள்
சுமார் 70 லட்சம் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்வதை ஏப்ரல் மாதத்தில் மட்டும் தவிர்த்து உள்ளதாக டிராய் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட போது நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் வேலை இழப்புகள் ஏற்பட்டன.
செல்போன் ரீசார்ஜ்
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாத நிலை ஏற்பட்டதால் வருமானம் இல்லாமல் இருந்தனர். அதன் காரணமாக தங்களது செல்போனில் ரீசார்ஜ் செய்வது குறைந்ததாக தகவல் வந்தது. இதனை அடுத்து தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் மிகப்பெரிய இழப்பு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தற்போதுதான் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு சிம்கார்டுகள்
இரண்டு சிம்கார்டுகளை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் கட்டண உயர்வு காரணமாக ஒரு சிம்கார்டில் ரீசார்ஜ் செய்வதை தவிர்த்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ
இந்த கட்டண உயர்வு காரணமாக குறைந்தபட்சமாக ஒரு லட்சம் வாடிக்கையாளர்களை ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ இழந்துள்ளதாகவும் அதனை அடுத்து பாரதி ஏர்டெல் 30.10 லட்சம் வாடிக்கையாளர்களையும், வோடபோன் ஐடியா 30.80 வாடிக்கையாளர்களை இழந்து உள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.
புதிய சிம்கார்டு
ஆனால் அதே நேரத்தில் ஏப்ரல் மாதத்தில் புதிதாக சிம்கார்டு வாங்கியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. ஜியோ நிறுவனத்தின் சிம்கார்டுகளை மட்டும் 17 லட்சம் வாடிக்கையாளர்கள் புதிதாக வாங்கி உள்ளதாகவும் இதனை அடுத்து அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை 40.60 கோடி ஆக அதிகரித்துள்ளதாகவும் டிராய் தெரிவித்துள்ளது.
ஏர்டெல்
ஏர்டெல் நிறுவனம் 8 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதாகவும் இதனையடுத்து இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 36.10 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வோடோபோன் ஐடியா
ஆனால் வோடோபோன் ஐடியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 16 லட்சம் பேர் குறைந்ததன் காரணமாக அதன் மொத்த வாடிக்கையாளர்கள் அளவு 25.90 கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப் - கூகுள்
வாட்ஸ்அப், கூகுள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மூலம் தற்போது மொபைல் போனில் இலவசமாக பேசும் வசதி வந்துவிட்டதால் தொலை தொடர்பு நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தினால் பொதுமக்கள் மாற்று வழியில் பேசிக் கொள்வார்கள் என்பதும் அதுவும் வாடிக்கையாளர்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இழப்பதற்கு ஒரு காரணமாகவும் கருதப்படுகிறது. எனவே தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டண உயர்வு குறித்து மறுபரிசீலனை செய்து கட்டணத்தை குறைத்தால் மீண்டும் பழைய எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications