டெல்லி: இந்தியாவில் தற்போது பண பரிவர்த்தனை என்பது டிஜிட்டல் வசதிகள் மூலம் மிக எளிதாகிவிட்டது. குறிப்பாக யுபிஐ பணப்பரிமாற்ற சேவை நம் நாம் செலவு செய்யும் விதத்திலேயே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
10 ரூபாயில் தொடங்கி 1 லட்சம் ரூபாய் வரை நாம் எங்கு சென்றாலும், எந்த பொருள் வாங்கினாலும் யுபிஐ பணப்பரிவர்த்தனை மூலம் அதற்கான தொகையை செலுத்துகிறோம். வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் பர்சை எடுத்து செல்ல வேண்டாம் போன் இருந்தால் போதும் என்ற நிலை வந்துவிட்டது.

பெரும்பாலான மக்கள் யுபிஐ பரிமாற்றம் செய்வதையே முதன்மையாக கொண்டுள்ளனர். உலகிலேயே அதிக அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை நடைபெறக்கூடிய ஒரு நாடாகவும் இந்தியா மாறி இருக்கிறது.
இவ்வாறு யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் தொடர்பாக இந்திரபிரஸ்தா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேசன் டெக்னாலஜி டெல்லி (ஐஐஐடி டெல்லி) ஆய்வு நடத்தியுள்ளது. அதில் யுபிஐ மற்றும் பிற டிஜிட்டல் பேமென்ட் தளங்கள் முன்பை விட பண வர்த்த பரிவர்த்தனையை மிகவும் எளிமையாக்கி உள்ளன என பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மக்கள் செலவு செய்யும் போக்கு குறித்தும் இந்த ஆய்வு முக்கிய தகவலை வெளிப்படுத்தியுள்ளது. மக்கள் கைகளில் பணத்தை எடுத்து பயன்படுத்தாத காரணத்தால் யுபிஐ வாயிலாக தேவையற்ற செலவுகளை அதாவது அதிக செலவுகளை மேற்கொள்வதாகவும் இந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் சுமார் 75% மக்கள் யுபிஐ மற்றும் பிற டிஜிட்டல் பேமென்ட் முறைகளை பயன்படுத்துவதன் விளைவாக அதிகமாக செலவு செய்துள்ளனர் என இந்த ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வின் அடிப்படையில் 91.5% மக்கள் யுபிஐ பரிமாற்றங்கள் எளிதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். பணத்தைவிட யுபிஐ மூலம் பண பரிமாற்றம் மேற்கொள்வதற்கு எளிதாக இருக்கிறது என்பதே பரவலாக கருத்தாக இருக்கிறது. கிட்டதட்ட 81% மக்கள் நாள்தோறும் யுபிஐ பரிவர்த்தனை முறையை பயன்படுத்துவதாகும் , சராசரியாக 200 ரூபாய் என்ற அளவில் ஒரு நாளைக்கு யுபிஐ மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
என்பிசிஐ அண்மையில் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 1,330 கோடியை எட்டியுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில், யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, யுபிஐ பரிவர்த்தனைகள் கிட்டத்தட்ட 60 சதவீதம் அதிகரித்து 11,768 கோடியை எட்டியது.
Story written by: Devika
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications