7வது சம்பள கமிஷன்.. இந்த அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் கட்ட பரவலுக்கும் மத்தியிலும் ஊழியர்களுக்கு நிவாரணம் கொடுக்கும் வகையில் ஒரு விஷயம் வந்துள்ளது எனில், அது 7வது சம்பள கமிஷன் தான். இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவில் பல்வேறு மாற்றங்களைச் செய்யவுள்ளது.

இதில் பலவும் ஊழியர்களுக்கு சாதகமாக வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக DA, DR, இரவு நேர பணிக்கான சிறப்பு அலவன்ஸ் என பலவும் ஜூலை மாதம் முதல் கொண்டு வரப்படவுள்ளதாகவும் தெரிகிறது.

இதில் குறிப்பாக சில மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் சலுகைகளும் நிவாரணமும் அளிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. சரி வாருங்கள் பார்க்கலாம். யாருக்கு என்ன சலுகை என?

AIS ஊழியர்களுக்கு ஸ்பெஷல் அலவன்ஸ் அதிகரிப்பு

AIS ஊழியர்களுக்கு ஸ்பெஷல் அலவன்ஸ் அதிகரிப்பு


அரசின் இந்த அறிவிப்பால் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தில் பல மாற்றங்களை பெறுவர். இந்த 7வது சம்பள கமிஷன் AIS அதிகாரிகளுக்கு சிறப்பு கொடுப்பனவுகளை வழங்கவுள்ளதாகவும் தெரிகிறது. குறிப்பாக லடாக் யூனியன் பிரதேசத்தில் நிறுத்தப்பட்டுள்ள AIS அதிகாரிகளுக்கு SPECIAL ALLOWANCE அதிகரிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மாநில தலைமை செயலாளர்களுக்கு கடிதம்

மாநில தலைமை செயலாளர்களுக்கு கடிதம்

இது குறித்து இந்திய அரசின் தரப்பில் செயலாளர் தேவேந்திர குமார், லடாக் யூனியன் பிரதேசத்தில் பணிபுரியும் அகில இந்திய சேவை அதிகாரிகளுக்கு கூடுதல் நிதி ஊக்கத்தொகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது உச்சவரம்புக்கும், அவ்வப்போது வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கும் உட்பட்டது என்றும் கூறியுள்ளார். மேலும் இது குறித்தான கடிதம், அனைத்து மாநில அரசாங்கங்களின் தலைமை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

எவ்வளவு கூடுதல் சலுகை?
 

எவ்வளவு கூடுதல் சலுகை?

இந்த ஸ்பெஷல் அலவன்ஸ் என்பது, தற்போது லடாக்கில் பணியில் உள்ள அகில இந்திய சேவை அதிகாரிகளுக்கு, அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 20 சதவீதம் கூடுதல் சிறப்பு சலுகையும், 10 சதவீதம் சிறப்பு பணி கொடுப்பனவும் வழங்கப்படலாம் என தெரிகிறது.

ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும்

ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும்

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஜுலை 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் முழு பலனையும் கொடுக்கும் என கூறியிருந்தது. இதன் மூலம் தற்போதுள்ள 17% அகவிலைப்படி, இந்த அதிகரிப்புக்குப் பிறகு 28% (17 + 3 + 4 + 4) ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிஏ கணக்கீடு 2021 ஜனவரி முதல் ஜூன் வரை எதிர்பார்க்கப்படும் 4% டிஏ மற்றும் 2020 ஜூலை முதல் டிசம்பர் வரை அறிவிக்கப்பட்ட 4% டிஏ மற்றும் ஜனவரி முதல் ஜூன் 2020 வரையிலான 3% டிஏ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

இதனால் பலரும் பயன்

இதனால் பலரும் பயன்

இது தவிர, மத்திய அரசு ஊழியர் அகவிலைப்படி (DA), ஹெச்ஆர்ஏ (HRA) பயணப்படி, மருத்துவ கொடுப்பனவு போன்ற பல்வேறு 7வது ஊதிய கமிஷன் சலுகைகள் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. ஜீலை 2021 முதல் இந்த முடக்கம் நீக்கப்பட்டால், சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவர். இதே சுமார் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கும் இது பயனளிக்கும்.

Array

Array

அரசு ஜூலை 2021 வரை DA மற்றும் DR இரண்டையும் மையம் முடக்கியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏவில் மாற்றம் செய்யப்படும் போது, ஓய்வூதியதாரர்களுக்கு டிஆரிலும் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருப்பினும் இந்த அறிவிப்புகள் முழுவதுமாக நடைமுறைக்கு வரும்போது தான் உண்மை என்னவென்று தெரியவரும். யாருக்கு என்ன சலுகை. எவ்வளவு அதிகரிப்பு என.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7th pay commission: AIS officers in ladakh to receive SA

7th pay commission: AIS officers in ladakh to receive SA
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X