கொரோனா பாதிப்பு ஏற்பட்டுக் காலத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான கிராக்கிப்படி குறைக்கப்பட்ட நிலையில், இந்த இழப்பீட்டை சரி செய்யும் வகையில் ஜனவரி முதல் ஜூன் 2021 வரையிலான காலகட்டத்தில் சுமார் 25 சதவீதம் கிராக்கிப்படியை மத்திய அரசு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வெளியாகியிருக்கும் கணிப்பின் படி அறிவிப்பு வெளியானால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் பெரிய அளவில் உயரும்.
மத்திய அரசு ஊழியர்கள்
இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு அறிவிப்பைத் தொடர்ந்து 7வது சம்பள கமிஷன் படி கிராக்கிப்படி (Dearness Allowance) அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போது இந்த முக்கியமான கணிப்புகள் வெளியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து central government servants (CGS) பிரிவு ஊழியர்களுக்கான கிராக்கிப்படி ஜூன் 2020 முதல் முடக்கப்பட்டு உள்ள நிலையில், கூடிய விரைவில் இப்பிரிவு ஊழியர்களுக்கான முடிவையும் மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணப்படி உயரும்
மேலும் மத்திய அரசின் கிராக்கிப்படி, அவர்களின் பயணப்படி (Travel Allowance) மற்றும் நிலுவையில் இருக்கும் தொகைக்கும் தொடர்புடையதாக இருக்கும் காரணத்தால் மத்திய அரசின் அறிவிப்புக்காகப் பல லட்சம் ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.
25 சதவீதம் கிராக்கிப்படி
இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு அறிவிப்பின் படி ஜனவரி- ஜூன் 2021 வரையிலான காலகட்டத்திற்குப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 4 சதவீத கிராக்கிபடி அறிவிக்கும் என்றும், இதன் மூலம் 17+4+4 என மொத்தம் 25 சதவீதம் கிராக்கிபடி அளவில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பளத்தில் பெரும் உயர்வு
7வது சம்பள கமிஷன் படி கிராக்கிப்படி உயரும் போது பயணப்படி-யும் நேரடியாக உயரும். இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் பெரிய அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
58 லட்சம் ஊழியர்கள்
நடப்பு ஆண்டுக்கும், நிலுவையில் இருக்கும் காலகட்டத்திற்கும் ஓரே நேரத்தில் கிராக்கிபடி மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இது மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் ஆகக் கருதுகின்றனர். மேலும் 7வது சம்பள கமிஷன் படி கிராக்கிப்படி உயர்த்தப்பட்டால் சுமார் 58 லட்சம் ஊழியர்கள் நன்மை அடைவார்கள்