கொரோனா தொற்றுக் காலத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான பல சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்த நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த பின்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்ட சலுகை வழங்கியது மட்டும் அல்லாமல், ரத்து செய்யப்பட்ட காலத்திற்கு நஷ்ட ஈடாகவும் DA அளவீட்டைப் பெரிய அளவில் அதிகரித்தது
இந்நிலையில் மத்திய அரசு, மீண்டும் அரசு ஊழியர்களுக்கான DA அளவீட்டை உயர்த்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு தற்போது பல முறை உயர்த்திய பின்பு அகவிலைப்படி (DA) 31 சதவீதமாக இருக்கும் நிலையில் நடப்பு ஆண்டுக்கான அகவிலைப்படி கணக்கீட்டில் 3 சதவீதம் உயர்த்தப்பட்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) அளவு 34 சதவீதமாக உயர உள்ளது.
ஜனவரி மற்றும் ஜூலை
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) ஜனவரி மற்றும் ஜூலை என ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை மத்திய அரசு புதுப்பிக்கப்படுகிறது. 7வது சம்பள கமிஷன் அமலாக்கம் செய்யப்பட்ட பின்பு மத்திய அரசு பணியிடத்தில் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளத்தில் பெரிய அளவு மாற்றம் ஏற்பட்டது.
கொரோனா தொற்று
இதைத் தொடர்ந்து கொரோனா தொற்றுக்குப் பின்று மத்திய அரசு உயர்த்திய அகவிலைப்படி (DA) மூலம் ஊழியர்களின் சம்பளம் கூடுதலாக அதிகரித்தது. பொதுவாக அகவிலைப்படி அளவை மத்திய அரசு ஊழியர்களின் தற்போதைய அடிப்படை ஊதியத்தில் பெருக்குவதன் மூலம் DA கணக்கிடப்படும்.
அகவிலைப்படி சதவீதம்
பொதுவாக மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி சதவீதம் அளவீட்டைக் கீழே உள்ள பார்முலா வைத்து தான் கணக்கிடப்படுகிறது.
அகவிலைப்படி சதவீதம் = ((கடந்த 12 மாதங்களில் AICPI இன் சராசரி (அடிப்படை ஆண்டு 2001=100) -115.76)/115.76) x 100
AICPI என்பது All-India Consumer Price Index
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications