இந்தியாவில் கொரோனா தொற்றுக் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கான பல சலுகைகளை அரசு நிறுத்தி வைத்திருந்த நிலையில் தற்போது, ஒவ்வொரு சலுகையாக அளிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான கிராக்கிப்படி மற்றும் கிராக்கிப்படி நிவாரணம் ஆகியவற்றை உயர்த்திக் கொடுத்த நிலையில் அனைத்து ஊழியர்களின் சம்பளம் அதிகரித்தது.
இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது, மத்திய அரசு.
குழந்தைகள் கல்வி உதவித்தொகை
கொரோனா தொற்றுக் காலத்தில் மத்திய அரசு ஊழியர்கள் யாரேனும் குழந்தைகள் கல்வி உதவித்தொகை (Education Allowance (CEA)) பெறாமல் இருந்திருந்தால், அவர்கள் தற்போது எவ்விதமான ஆவணமும் இல்லாமல் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற அனுமதி அளித்துள்ளது.
மாதம் 2,250 ரூபாய்
மத்திய அரசு தனது ஊழியர்களின் கல்விக்காக ஒவ்வொரு மாதமும் 2,250 ரூபாய் அளவிலான உதவித் தொகையை 7வது சம்பள கமிஷன் அடிப்படையில் அளிக்கிறது. இந்தத் தொகையைத் தகுந்த ஆவணத்தைச் சமர்ப்பித்துப் பெற முடியும்.
கொரோனா காலம்
ஆனால் இந்தக் கொரோனா காலத்தில் போதுமான ஆவணங்கள் பெற முடியாத பட்சத்தில் மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கு ஆவணமும் இல்லாமல் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற அனுமதி அளித்துள்ளது.
ஜூலை மாத அறிவிப்பு
மத்திய அரசின் பர்சனல் மற்றும் ட்ரைனிங் துறை ஜூலை மாதம் கிராக்கிப்படி மற்றும் கிராக்கிப்படி நிவாரணம் அறிவித்த போதே குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
ஆவணங்கள் பற்றாக்குறை
ஆனால் லாக்டவுன் காலத்தில் கல்விக் கட்டணம் ஆன்லைன் மூலம் செலுத்தியதாலும், குழந்தைகளின் ரிப்போட்ர்ட் கார்டு கல்வி நிர்வாகம் அனுப்பாத நிலையில் போதுமான ஆவணங்கள் மத்திய அரசு ஊழியர்களிடம் இல்லாத காரணத்தால் இத்தொகையைப் பெற முடியாமல் போனது.
அரசு சலுகை
இந்தப் பிரச்சனை பெரியதாக வெடித்த போது மத்திய அரசின் பர்சனல் மற்றும் ட்ரைனிங் துறை மார்ச் 2020-21ஆம் நிதியாண்டுக்கான குழந்தைகள் கல்வி உதவித்தொகையைப் பெற ரிசல்ட் / ரிப்போர்ட் கார்டு / கல்வி கட்டணம் செலுத்தியதற்கான எஸ்எம்எஸ் அல்லது ஈமெயில் ஆகியவை பிரின்ட் அவுட் சமர்ப்பித்துப் பெறலாம். இல்லையெனில் self-declaration முறையில் பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
வருடத்திற்கு 54000 ரூபாய்
மத்திய அரசு ஊழியர்கள் அதிகப்படியாக இரு குழந்தைகளுக்குக் குழந்தைகள் கல்வி உதவித்தொகையைப் பெற முடியும். இதன் மூலம் ஒருவர் 2,250 முதல் 4500 ரூபாய் வரையில் ஒவ்வொரு மாதமும் கல்விக்கான உதவித் தொகையாகப் பெறலாம். இதன் மூலம் 27000 ரூபாய் முதல் 54000 ரூபாய் வரையிலான உதவித் தொகையைப் பெறலாம்.
தீபாவளி
இதன் மூலம் இதுநாள் வரையில் 020-21ஆம் நிதியாண்டுக்கான குழந்தைகள் கல்வி உதவித்தொகையைப் பெறாதவர்கள், தீபாவளி பண்டிக்கு முன்பு மிகப்பெரிய தொகையைத் தங்களது சம்பளத்தில் பெற உள்ளனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications