மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பாக அரசிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்க உள்ளது.
அடுத்த மாதம், அதாவது ஜூலை மாதத்திற்குள், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.
ஜூலை 1 ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கான DA அளவு மீண்டும் உயர்வை மத்திய அரசு அமல்படுத்த வாய்ப்புள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீடு
அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) அடிப்படையில் வழக்கமாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி-யை மத்திய அரசு திருத்தி அறிவிக்கப்படும். இந்த ஆண்டு ஜனவரியில், 7வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படியை உயர்த்தி அரசு அறிவித்தது.
4 சதவீதம் வரை உயரும்
ஜனவரி மாதம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான டிஏ மற்றும் டிஆர் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் AICPI 126க்கு மேல் இருந்தால் அகவிலைப்படி 4 சதவீதம் வரை உயரக்கூடும் என சந்தை ஆய்வுகள் கூறுகிறது.
அகவிலைப்படி
ஜனவரி மற்றும் பிப்ரவரியில் ஏஐசிபிஐ முறையே 125.1 மற்றும் 125 ஆக இருந்தது, மார்ச் மாதத்தில் அது 126 ஆக உயர்ந்ததுள்ளது. இப்போது, ஏஐசிபிஐ உயர்ந்துள்ள நிலையில் டிஏ 4 சதவீதம் வரையில் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
38 சதவீத அகவிலைப்படி
தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 34 சதவீதம் டிஏ வழங்கப்படுகிறது. ஜூலை மாதம் 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்பட்டால், அவர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் இருந்து சுமார் 38 சதவீத அகவிலைப்படி கிடைக்கும். அகவிலைப்படி (DA) என்பது அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது, அதே நேரத்தில் அகவிலை நிவாரணம் (DR) ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வழங்கப்படுகிறது.
கணக்கீடு
தற்போதைய சந்தை கணிப்பின் படி 38 சதவீதம் அகவிலைப்படி அளிக்கப்பட்டால் 18,000 அடிப்படை ஊதியம் உள்ள ஒரு ஊழியரின் சம்பளம் வைத்து கணக்கிடுவோம். தற்போது 34 சதவீத டிஏ விகிதத்தில், ஊழியர் ரூ.6,120 டிஏ பெறுகிறார். ஜூலையில் அகவிலைப்படி உயர்வு 4 சதவீதமாக அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியருக்கு ரூ.6,840 டிஏ கிடைக்கும். அதாவது ரூ.720 அதிகரிக்கும். இது ஒவ்வொரு பிரிவு பணிகளுக்கு மாறுபடும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications