2024-ஆம் ஆண்டில் வருமான வரிச் சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் 2025-ஆம் ஆண்டில் வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் (ITR) செய்யும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஆண்டு தொடக்கத்தில் பொது தேர்தல் நடந்து முடிந்ததால் அரசாங்கம் வருமானவரிச் சட்டங்களில் சில மாற்றங்களை செய்திருக்கிறது. இந்த மாற்றங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.
திருத்தப்பட்ட வருமான வரி சட்டங்கள் என்னென்ன?:
புதிய வருமான வரி ஸ்லாப்: புதிய வருமான வரி ஸ்லாப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் ரூ. 3,00,001 முதல் ரூ. 7,00,000 வரையிலான வருமானத்திற்கு 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது. ரூ.7,00,001 முதல் ரூ.10,00,000 வரையிலான வருமானத்திற்கு 10 % வரியும், ரூ.10,00,001 முதல் ரூ.12,00,000 வரையிலான வருமானத்திற்கு 15 சதவீத வரியும், ரூ.12,00,001 முதல் ரூ.15,00,000 வரையிலான வருமானத்திற்கு 20 சதவீதமும், ரூ.15,00,000-க்கு மேல் உள்ள வருமானத்திற்கு 30 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது.

நிலையான விலக்கு வரம்பு: புதிய வரி விதிப்பின் கீழ் நிலையான விலக்கு 50,000 ரூபாயிலிருந்து ரூ.75,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய வரி முறையின் கீழ், சம்பளம் பெறும் நபர்களுக்கு ரூ.50,000 மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ.15,000 என்ற வரம்பில் மாற்றம் இல்லாமல் அப்படியே உள்ளது. புதிய வரிமுறையின் கீழ் உள்ள வரிவிலக்கு அதிகரிப்பு வரி செலுத்தக்கூடிய வருமானத்தை குறைக்கிறது.
NPS டிடெக்ஷன்: புதிய வரிவிதிப்பு முறையின் கீழ் தனி நபர்கள் என்பிஎஸ் திட்டத்திற்கு 10 சதவீதத்திலிருந்து 14% வரை கழிவுகளை கோரலாம். ஆனால் 7.5 லட்சத்திற்கும் அதிகமான EPF மற்றும் NPS பங்களிப்புகள் வரிகளுக்கு உட்பட்டவை.
ரியல் எஸ்டேட் விற்பனை மீதான டிடிஎஸ்-இல் மாற்றங்கள்: 50 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படும் சொத்துக்களுக்கு தனிப்பட்ட விற்பனையாளரை பொருட்படுத்தாமல் முழு விற்பனை மதிப்பிலும் டிடிஎஸ் பொருந்தும்.
விவாட் சே விஸ்வாஸ் திட்டம் 2.0: விவாட் சே விஸ்வாஸ் திட்டம் 2.0 என்பது அரசு அறிவித்துள்ள ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம், வரி செலுத்துவோர்கள் தங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வரி வழக்குகளை எளிதாக தீர்த்து கொள்ள முடியும்.
ஆதார் நம்பர் கட்டாயம்: 2024-ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் முதல் தனிநபர்கள் தங்கள் ஆதார் எண்ரோல்மென்ட் நம்பரை ஐடிஆர் தாக்கல் செய்யவும் அல்லது பான் கார்டு விண்ணப்பித்து பெறவும் பயன்படுத்த முடியாது. இந்த செயல்முறைகளுக்கு கண்டிப்பாக ஆதார் நம்பர் அவசியமாகும். ஆதார் கார்டு இல்லாதவர்கள் தற்போது இந்த பணிகளை முடிப்பதில் சிரமங்களை சந்திக்க நேரிடலாம்.
பழைய ஐடிஆர் திருத்தங்களுக்கான காலக்கெடு குறைக்கப்பட்டது: ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான வருமானத்தை தவிர்த்த வழக்குகளுக்கு பழைய வருமான வரியை தாக்கல் செய்யும் காலக்கேடு 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் கிரெடிட்: சம்பளம் பெறும் நபர்கள் தற்போது தங்கள் சம்பளத்தின் மீதான டிடிஎஸ்-க்கு எதிராக மற்ற வருமான ஆதாரங்களிலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் அல்லது டிசிஎஸ் தொகையை சமன் செய்யலாம்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications