இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோமோட்டோகார்ப் 2020 லாக்டவுன் அறிவிப்பின் போது உற்பத்தி பணிகளை முழுமையாகச் செய்ய முடியாமல் தவித்தது. குறிப்பாக ஊழியர்கள் மத்தியில் கொரோனா தொற்று பரவிய காரணத்தால் தளர்வுகள் அளிக்கப்பட்டும் முழுமையான பணிகளைச் செய்ய முடியாமல் தவித்தது.
இந்நிலையில் தற்போது 2வது கொரோனா அலை நாடு முழுவதும் பரவியுள்ள நிலையில், தமிழ்நாடு உட்படப் பல மாநிலங்கள் தளர்வுகள் உடன் புதிய லாக்டவுன் கட்டுப்பாடுகளை விதித்தது வருகிறது.
ஹீரோமோட்டோ கார்ப் முடிவு
இந்தச் சூழ்நிலையில் 2வது கொரோனா அலையில் நிறுவனத்தின் உற்பத்தி பணிகள் தடைப்பெற்று வர்த்தகம் பாதிப்பு அடையக் கூடாது என்பதை உணர்ந்த நாட்டின் முன்னணி பைக் தயாரிப்பு நிறுவனமான ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனம் சுமார் 80,000 ஊழியர்களுக்கு இலவசமாகக் கொரோனா தடுப்பு மருந்தை அளிக்க முடிவு செய்துள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து
இந்தியாவில் இன்போசிஸ், டாடா, ரிலையன்ஸ், டிவிஎஸ் உட்படப் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்குமான கொரோனா தடுப்பு மருந்துக்கான செலவுகளை நிறுவனமே ஏற்றுக்கொண்டு இலவசமாகக் கொரோனா தடுப்பு மருந்து அளித்து வருகிறது.
80,000 ஊழியர்களுக்குத் தடுப்பு மருந்து
இந்த வரிசையில் தற்போது ஹீரோமோட்டோ கார்ப் மற்றும் அதன் கிளை நிறுவனத்தில் இருக்கும் நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு மட்டுமே இலவசமாகக் கொரோனா தடுப்பு மருந்தை அளிக்க முடிவு செய்துள்ளது. ஹீரோமோட்டோ கார்ப்-ன் இந்த நடவடிக்கையின் மூலம் இந்நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 80,000 பேர் கொரோனா தடுப்பு மருந்து பெற உள்ளனர்.
ஹீரோமோட்டோ கார்ப் கிளை நிறுவனங்கள்
ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனத்தைப் போலவே இதன் கிளை நிறுவனங்களான ஹீரோ பின்கார்ப், ஹீரோ பியூச்சர் எனர்ஜீஸ், ராக்மேன் இண்டஸ்ட்ரீஸ், ஹீரோ எலக்ட்ரோநிக்ஸ் மற்றும் ஏஜி இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவன ஊழியர்களுக்கும் அரசு விதிமுறையின் படி 45 வயதிற்கும் அதிகமானவர்களுக்கு இலவசமாகக் கொரோனா தடுப்பூசி அளிக்கப்படுகிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications