மாருதி சுசுகி நிறுவனத்தின் தலைவர் பார்க்கவா இந்தியாவில் இருக்கும் 88 சதவீத குடும்பங்கள் தற்போது கார் வாங்கும் வசதியில் இல்லை எனக் கூறியிருக்கிறார். 2025 ஆம் நிதியாண்டில் மாருதி சுசுகி நிறுவனத்தின் நான்காவது காலாண்டு அறிக்கை வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக பேசி இருக்கும் நிறுவன தலைவர் ஆர் சி பார்கவா , உள்நாட்டில் பயணிகள் வாகன சந்தை பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்தியாவில் கார் தேவை குறைந்து வருவதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார். பல ஆண்டுகளாகவே உள்நாட்டில் கார்களின் தேவையும் கார்களை வாங்குவோர் எண்ணிக்கையும் சரிவடைந்து வருகிறது என தெரிவித்தார்.

மக்களின் வாங்கும் திறன் குறைந்திருப்பதே இதற்கு முக்கிய காரணம் என அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருக்கும் 300 மில்லியன் குடும்பங்களில் 200 மில்லியன் குடும்பங்களின் ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கும் கீழ் தான் இருக்கிறது. இவர்களுக்கு சொந்தமாக ஒரு கார் வாங்குவது என்பது நீண்ட கால கனவாகவே இருக்கிறது என பார்க்கவா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதல் முதலாக கார் வாங்கக்கூடிய குடும்பங்கள் பெரும்பாலும் மாருதி சுசுகி கார்களை வாங்குவதற்கு தான் விரும்புவார்கள். ஆனால் தற்போது அந்த சந்தையே ஆட்டம் கண்டு இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார். கார்களை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் விலை உயர்வு, அரசு கொண்டு வந்திருக்கும் பல்வேறு ஒழுங்கு முறைகள் ஆகியவை காரணமாக சிறிய ரக கார்களின் விலை கூட திடீரென உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் சொந்தமாக கார் வாங்கும் கனவையே விட்டு விட்டனர் என தெரிவித்திருக்கிறார்.
ஒட்டுமொத்தமாகவே கார்களின் விலை உயர்ந்து விட்டது எனவே மக்கள் அவற்றை வாங்குவதை நிறுத்தி விட்டனர் என அவர் கூறுகிறார். எதிர்வரும் நாட்களிலும் இந்தியாவில் கார் விற்பனை எதிர்பார்த்த அளவு இருக்காது என தெரிவித்திருக்கும் அவர் இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கணிப்புகளை மேற்கோள் காட்டியிருக்கிறார்.
இதன்படி 2025 - 26 ஆம் நிதி ஆண்டுக்கான கார் விற்பனை வளர்ச்சி 1-2 சதவீதமாக மட்டுமே இருக்கும் என கூறுகிறார். கடந்த ஆண்டு கூட 3 சதவீத வளர்ச்சியில் இருந்த கார் விற்பனை இந்த ஆண்டு மந்த நிலைக்கு செல்லும் என தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே இருந்த அளவுக்கு கூட உள்நாட்டில் கார்களுக்கான தேவை அதிகரிக்கவில்லை மாறாக குறைந்து தான் வருகிறது என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
உள்நாட்டில் விற்பனை மந்த நிலைக்கு சென்றாலும் ஏற்றுமதி பிரகாசமான ஒரு வாய்ப்பாக உருவாகி இருக்கிறது என தெரிவித்திருக்கிறார். கடந்த ஆண்டில் மட்டும் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஏற்றுமதி 17 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. நடப்பாண்டில் 20 சதவீதமாக அதிகரிக்க கூடும் என மாருதி சுசுகி நிறுவனம் எதிர்பார்க்கிறது. 2025 ஆம் நிதி ஆண்டின் நான்காவது காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி மாருதி சுசுகி நிறுவனத்தின் வருமானம் 9 சதவீதமும் லாபம் 4.3 சதவீதமும் குறைந்திருக்கிறது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications