8வது சம்பள கமிஷன் பணிகள் விறுவிறு.. அடிப்படை சம்பளமே 44000 ரூபாயா.. இது வேற லெவல் விஷ.யமாச்சே..!!

மத்திய அரசு பணியில் இருக்கும் ஊழியர்களுக்கும், பணியில் இருந்த ஓய்வூதியதாரர்களுக்கும் நீண்ட காலமாக எதிர்பார்த்த 8வது சம்பள கமிஷன் தனது பணிகளைத் தொடங்கியுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையிலான இந்தக் குழு சம்பளம், ஓய்வூதியம், கொடுப்பனவுகள் ஆகியவற்றை மறுஆய்வு செய்து பரிந்துரை செய்யும்.

இதில் மிக முக்கியமான ஒன்று "ஃபிட்மெண்ட் ஃபேக்டர்" எனப்படும் பெருக்குக் காரணி. இது பழைய அடிப்படைச் சம்பளத்தை புதிய சம்பளமாக மாற்றும் முக்கிய எண். இந்தியா முழுவதும் மக்கள் 8வது சம்பள கமிஷன் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

8வது சம்பள கமிஷன் பணிகள் விறுவிறு.. அடிப்படை சம்பளம்.. வந்தது முக்கிய அப்டேட்..!!

8வது ஊதிய கமிஷன் உருவாக்கம்:
மத்திய அரசு சமீபத்தில் அமைத்த 8வது சம்பள கமிஷன், மத்திய அரசின் 48.62 லட்சம் ஊழியர்களுக்கும் 67.85 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் சம்பளம், கொடுப்பனவுகள், ஓய்வூதியம் ஆகியவற்றை மறுஆய்வு செய்து பரிந்துரை செய்யும். இதன் பரிந்துரைகள் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8வது ஊதிய கமிஷன் உருவாக்க ஜனவரி 2025இல் மத்திய அமைச்சரவை கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்தது. அக்டோபர் 2025இல் இக்குழுவின் பணி விதிகள் (ToR) அனுமதிக்கப்பட்டன. உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் இந்தக் குழு தற்போது செயல்பட்டு வருகிறது.

ஃபிட்மெண்ட் ஃபேக்டர் எவ்வளவாக இருக்கும்?
வல்லுநர்களின் மதிப்பீட்டின்படி இம்முறை ஃபிட்மெண்ட் ஃபேக்டர் 1.83 முதல் 2.46 வரையிலான இடைவெளியில் இருக்க வாய்ப்புள்ளது என கணித்துள்ளது. இதன் மூலம் குறைந்தபட்சம் 1.83 ஆகவும், அதிகபட்சம் 2.46 ஆகவும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் ரூ.18,000 ஆகும். இந்த நிலையில் 8வது ஊதிய குழு ஃபிட்மெண்ட் ஃபேக்டர்-ஐ 1.83 ஆக நிர்ணயம் செய்தால் அடிப்படை சம்பளம் ரூ.32,940 ஆக உயரும். இதுவே 2.46 ஆக நிர்ணயம் செய்தால் ரூ.44,280 ஆகவும் உயரும். இறுதி முடிவு இக்குழுவின் இறுதி அறிக்கை வந்த பிறகே மத்திய அரசு எடுக்கும்.

ஃபிட்மெண்ட் ஃபேக்டர் ஏன் முக்கியம்?
இந்தப் Fitment Factor காரணி அடிப்படைச் சம்பளத்தை மட்டுமல்ல, அகவிலைப்படி, வீட்டுவாடகைப்படி, பயணப்படி உள்ளிட்ட அனைத்து படிகளையும் ஒரே நேரத்தில் உயர்த்தும். இதனால் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் நேரடியாகப் பயனடைவார்கள்.

எவ்வளவு சம்பள உயர்வு கிடைக்கும்?
அம்பிட் கேபிடல் நிறுவனத்தின் ஆய்வின்படி குறைந்தபட்ச மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு 14 சதவீதமாக இருக்கலாம். அதிகபட்சமாக 54 சதவீதம் வரை செல்ல வாய்ப்பு இருந்தாலும், அரசின் நிதி நிலைமை காரணமாக அது சாத்தியமில்லை என்று கருதப்படுகிறது.

பல்வேறு பே கிரேடு நிலைகளில் (1900, 2400, 4600 போன்றவை) 1.92 முதல் 2.57 வரையிலான ஃபிட்மெண்ட் ஃபேக்டரை வைத்து கணக்கிட்டால், ஒவ்வொரு நிலையிலும் சம்பளம் கணிசமாக உயரும் என்று தெரிகிறது.

எப்போது அமலுக்கு வரும்?
8வது சம்பள கமிஷன் தனது பரிந்துரைகளை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு அரசு ஃபிட்மெண்ட் ஃபேக்டரை இறுதி செய்து அமல்படுத்தும்.

இதுமட்டும் நாட்டின் பொருளாதார நிலைமை, பணவீக்க விகிதம், அரசின் வருவாய் ஆகியவை இறுதி முடிவைத் தீர்மானிக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மத்திய அரசு ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இந்த மாற்றம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒன்றாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+