மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளத்தையும் ஓய்வூதிய தொகையும் உயர்த்துவதற்காக 8ஆவது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. 8ஆவது சம்பள கமிஷன் தற்போது சம்பளம் மற்றும் ஓய்வூதிய தொகை எவ்வளவு வழங்கப்படுகிறது , விலைவாசி எப்படி இருக்கிறது என்பன உள்ளிட்டவற்றையெல்லாம் ஆய்வு செய்து சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரையை அரசிடம் வழங்கும் .
மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து புதிய சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆனால் எட்டாவது சம்பள கமிஷனே தற்போது தான் அமைக்கப்பட்டு இருக்கிறது. என்பதால் 2027 ஆம் இறுதியில் தான் சம்பள உயர்வு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் 2026, ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து என முன் தேதி இட்டு அரியர் தொகையாக மத்திய அரசு ஊழியர்களுக்கு சேர வேண்டிய பணம் வழங்கப்பட்டு விடும்.

சம்பள கமிஷனை பொருத்தவரை ஃபிட்மன்ட் ஃபேக்டர் என்ற ஒரு காரணியை அடிப்படையாகக் கொண்டுதான் மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பதையே தீர்மானிக்கிறது. அதாவது மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை ஃபிட்மன்ட் ஃபேக்டர் என நியமனம் செய்யக்கூடிய நம்பரால் பெருக்கி தான் வழங்குகிறார்கள்.
அப்படி பார்க்கும்போது 8ஆவது சம்பள கமிஷனில் எவ்வளவு ஃபிட்மன்ட் ஃபேக்டர் கணக்கில் கொள்ளப்படும் என மத்திய அரசு ஊழியர்கள் மிக ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் பொருளாதார நிபுணர் ஆர் சண்முகம் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த முறை 2.5 லிருந்து 3 என்ற அளவுக்கு ஃபிட்மன்ட் ஃபேக்டர் நிர்ணயிக்கப்படலாம் என தெரிவித்திருக்கிறார். பைனான்சியல் எக்ஸ்பிரஸில் கட்டுரை எழுதி இருக்கக்கூடிய அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

நாட்டின் பணவீக்கம், உற்பத்தி திறன், அரசின் நிதி சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த அளவுக்குள் தான் ஃபிட்மன்ட் ஃபேக்டர் நிர்ணயம் செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என கூறியிருக்கிறார். ஒருவேளை இவர் கூறுவதைப் போல 2.5 என ஃபிட்மண்ட் பேக்டர் கொண்டால் தற்போது குறைந்தபட்ச அடிப்படை சம்பளமாக 35,000 ரூபாயை வாங்கக்கூடிய ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் 87 ,500 ரூபாயாக உயரும். ஒரு வேளை 3 என ஃபிட்மன்ட் ஃபேக்டர் கொண்டால் 1,05,000 ரூபாயாக உயர்வு காணும்.
சம்பள கமிஷன் நடைமுறைக்கு வரும் போது அகவிலைப்படி பூஜ்ஜியமாகிவிடும். எனவே தற்போது அவர்கள் வாங்கும் மொத்த சம்பளத்தில் அவர்களுக்கு 25% வரை உயர்வு கிடைக்கலாம். இருந்தாலும் பல்வேறு புரோக்கரேஜ் நிறுவனங்களும் 2.5 என்பதற்கு கீழாக தான் ஃபிட்மன்ட் ஃபேக்டர் இருக்கும் என கணித்துள்ளன. தற்போது முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் 8ஆவது சம்பள கமிஷன் தன்னுடைய பணிகளை தொடங்கி இருக்கிறது . 18 மாதங்களுக்குள் இந்த கமிஷன் அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications