இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள கமிஷனின் பரிந்துரைகள் அடிப்படையில் தான் ஊதியம் ஊதியமும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய தொகையும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் இந்தியாவில் சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு ஊழியர்களின் சம்பளமும் ஓய்வூதிய தொகையும் மாற்றி அமைக்கப்படும்.
சம்பள கமிஷன்: தற்போது ஏழாவது சம்பள கமிஷன் அளித்த பரிந்துரை அடிப்படையில் தான் இந்தியாவில் மத்திய ஊழியர்களுக்கான சம்பளம் என்பது வழங்கப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி மாதத்தில் இருந்து 8ஆவது சம்பள கமிஷனை நடைமுறைப்படுத்தியாக வேண்டும். இதற்காக மத்திய அரசு 8ஆவது சம்பள கமிஷனை நியமனம் செய்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் இந்த சம்பள கமிஷன் எப்பொழுது தங்களுடைய பரிந்துரைகளை வெளியிடும் என மிகவும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.

தாமதம் ஆகிறதா?: எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் 8ஆவது சம்பள கமிஷன் தன்னுடைய பரிந்துரைகளை வழங்கி அரசு அதனை ஏற்று அதற்கேற்றபடி மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தையும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வு தொகையையும் மாற்றி அது வரும் ஜனவரி மாதத்திலேயே அமலுக்கு வருவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் தற்போதைக்கு சம்பள கமிஷனை மட்டுமே அரசு நியமனம் செய்திருக்கிறது.
இரண்டு ஆண்டுகள்: இவர்கள் அனைத்து தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தன்னுடைய பரிந்துரைகளை வழங்குவதற்கு போதிய கால அவகாசம் தற்போதைக்கு இல்லை. உதாரணமாக ஏழாவது சம்பள கமிஷன் என்பது 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது அதன் பரிந்துரைகள் இரண்டு ஆண்டுகள் முடிந்து 2016 ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது.
எப்போது புதிய சம்பளம்: ஆனால் மத்திய அரசு 2026 ஜனவரியில் நடைமுறைப்படுத்த வேண்டிய 8ஆவது சம்பள கமிஷனை 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தான் நிர்ணயம் செய்திருக்கிறது. இந்த சம்பளக் கமிஷனின் உறுப்பினர்கள், விதிமுறைகள் உள்ளிட்டவற்றை இதுவரை மத்திய அரசு இறுதி செய்யவில்லை. இவற்றை எல்லாம் பார்க்கும் போது 2026 ஜனவரியிலிருந்து அவர்களுக்கு புதிய சம்பளம் கிடைக்காது.
எப்போது வர வாய்ப்பு: சம்பள கமிஷன் பரிந்துரைகளை வழங்கி அது நடைமுறைக்கு வருவதற்கு 2026 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2027 ஆம் ஆண்டின் தொடக்கம் வரை தாமதமாகலாம் என சொல்லப்படுகிறது. சம்பள கமிஷன் தாமதமாக நடைமுறைக்கு வந்தாலும் 2026 ஜனவரி மாதத்தில் இருந்து அது நடைமுறைக்கு வந்ததாக கருதப்பட்டு ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய அந்த கூடுதல் தொகையை மத்திய அரசு அரியர் பணமாக வழங்கும். இருந்தாலும் 8ஆவது சம்பள கமிஷன் எப்படி ஊழியர் சம்பளத்தை மாற்றி அமைக்க போகிறது , ஃபிட்மண்ட் ஃபேக்டர் என்ன என்பது குறித்து மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பாத்து காத்து கிடக்கின்றனர்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications