இந்திய அரசு ஊழியர்களிடையே 8வது சம்பள கமிஷன் தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. 2016 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த 7வது சம்பள கமிஷன், மத்திய அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் குறைந்தபட்ச தொகையை ரூ. 7,000-லிருந்து ரூ. 18,000 ஆகவும், உயர் அதிகாரிகளின் அதிகபட்ச சம்பளத்தை 2.5 லட்சம் ரூபாய் வரையிலும் உயர்த்தியது.
பொதுவாக, ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு புதிய சம்பள கமிஷன் அமைக்கப்படுகிறது. இந்த காலவரையை வைத்து பார்க்கும் போது, 8வது சம்பள கமிஷன் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர வேண்டும்.

2026ல் நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் மத்திய அரசு 8வது சம்பள கமிஷன் அமைத்து இதற்கான கள ஆய்வுகளை தற்போது துவங்கியிருக்க வேண்டும், ஆனால் இது குறித்து எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை மத்திய அரசு வெளியிட்டவில்லை என்பதால் மத்திய அரசு ஊழியர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் சில அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது, அதாவது மத்திய அரசு 8வது சம்பள கமிஷன் அமைத்து மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதை விடுத்து, சம்பள உயர்வை செயல்திறன் அல்லது பணவீக்க விகிதத்துடன் இணைப்பது போன்ற மாற்று வழிமுறைகளை ஆராய்ந்து வருவதாக கூறுகின்றனர்.
இந்த அணுகுமுறை வந்தால் ஊழியர்களின் செயல்திறன் அடிப்படையில் சம்பள உயர்வு ஓவ்வொரு வருடமும் கிடைக்கும், தற்போது நடைமுறையில் இருப்பது போல் பத்து வருடத்திற்கு ஒரு முறை மதிப்பாய்வு சுழற்சி கட்டமைப்பு எளிதாக நீக்கிவிட முடியும். இப்புதிய முறை மூலம் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் அடிக்கடி மாற்றம் செய்வது எளிதாகும், அதேபோல் திறமையான ஊழியர்களை பெரிய அளவில் ஊக்குவிக்க முடியம்.
இதேவேளையில் மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் 8வது சம்பள கமிஷனை "தற்போது கருத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை" என்று தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை அரசு ஊழியர்களின் சம்பள திருத்தங்களின் எதிர்காலம் குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது.
8வது சம்பள கமிஷன் அமைப்பதில் ஏற்பட்டுள்ள கால தாமதம் அரசு தனது பணியாளர்களுக்கு நியாயமான மற்றும் போட்டித்திறன் அடிப்படையிலான ஊதியத்தை உறுதி செய்யும் புதுமையான வழிகளை ஆராய்ந்து வருவது தெளிவாகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications