மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்குவதற்காக அமைக்கப்பட்ட 8ஆவது சம்பள கமிஷன் தன்னுடைய பணிகளை தீவிரமாக முன்னெடுத்து இருக்கிறது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளமும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையும் மாற்றி அமைக்கப்படுகிறது.
2026 ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சம்பள கமிஷனே கடந்த ஆண்டு இறுதியில் தான் அமைக்கப்பட்டது என்பதால் இந்த முறை சம்பள கமிஷன் பணிகள் தாமதம் ஆகிவிட்டன. சம்பள கமிஷன் பரிந்துரையை அனுப்பி அது நடைமுறைக்கு வந்து ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கு 2028 ஆம் ஆண்டு தொடக்கம் ஆகிவிடும் என சொல்லப்படுகிறது. அப்படியே தாமதம் ஆனாலும் அரசு ஊழியர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கான அரியர் தொகை கணக்கிட்டு வழங்கப்பட்டு விடும்.

இந்த சூழலில் எட்டாவது சம்பள கமிஷன் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான என்சி-ஜேசிஎம் கூட்டமைப்பு 51 பக்கம் கொண்ட ஒரு கோரிக்கை மனுவை எட்டாவது சம்பள கமிஷனிடம் சமர்ப்பித்திருக்கிறது. இதன்படி அரசு ஊழியர்களுக்கு இந்த முறை 3.83 என்ற ஃபிட்மன்ட் ஃபேக்டரை அடிப்படையாகக் கொண்டு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறது.
இது ஏற்கப்பட்டால் அரசு ஊழியர்களின் சம்பளம் 3.8 மடங்குக்கு மேல் உயரும். தற்போதுள்ள அளவிலிருந்து மூன்றரை மடங்குக்கு மேல் உயர்த்தப்பட வேண்டும் என அதில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என அதில் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். மேலும் குறிப்பிட்ட சில பே லெவல்களை ஒருங்கிணைப்பது, பணவீக்கம் அடிப்படையிலான அகவிலைப்படி உயர்வு தேவை என்றும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படக்கூடிய வீட்டு வாடகை கொடுப்பனுவிலும் மாற்றம் வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதாவது மெட்ரோ நகரங்களுக்கு 40 சதவீத ஹவுஸ் ரெண்ட் அலொவென்ஸ் வழங்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர். ஹவுஸ் ரெண்ட் அலோவென்ஸ், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்டவற்றை பணவீக்கத்துக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த கோரிக்கை ஏற்று ஃபிட்மெண்ட் ஃபேக்டர் 3.83 என நியமனம் செய்யப்பட்டால் தற்போது 18 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் வாங்கக்கூடிய மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் மூன்று 69,000 ரூபாயாக உயரும். லெவல் 10 நிலையில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 2.15 லட்சம் ரூபாயாக அதிகரிக்கும்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!



Click it and Unblock the Notifications

