இந்தியா முழுவதும் லட்ச கணக்கான அரசு ஊழியர்கள் 8வது சம்பள கமிஷன் முடிவுகளுக்காக காத்திருக்கும் வேளையில் மத்திய அரசு டிசம்பர் 8 ஆம் தேதி முக்கியமான அப்பேட்டை வெளியிட்டுள்ளது.
என்கே பிரேம்சந்திரன், தங்க தமிழ்செல்வன், கணபதி ராஜ்குமார் பி, தர்மேந்திர யாதவ் ஆகியோரின் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி, இந்த 8வது சம்பள கமிஷன் மூலம் தற்போது பணியில் இருக்கும் 50.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடையவர்கள் என்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் 8வது சம்பள கமிஷன் தொடர்பாக கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு மத்திய நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி, லோக்சபாவில் எழுத்துப்பூர்வமான பதில் மூலம் தெரிவித்தார். இதில் முக்கியமாக 8வது சம்பள கமிஷன் எப்போது செயல்படுத்தப்படும் என்ற கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.
8வது சம்பள கமிஷன் செயல்படுத்தும் தேதியை மத்திய அரசே தீர்மானிக்கும் என்று தெரிவித்தார். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பத்தை தீர்மானிக்க குழு அமைக்கப்பட்ட தேதியில் இருந்து 18 மாதங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் தனது பரிந்துரைகளை அளிக்கும் என தெரிவித்தார்.
இதேபோல் 8வது சம்பள கமிஷன் அடிப்படையிலான சம்பளத்தை வழங்க 2026-27 நிதியாண்டின் மத்திய பட்ஜெட்டிலும் மாற்றங்கள் கொண்டு வரப்படும் எனவும் உறுதி அளித்தார்.
8வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு இதுவரையில் 41 நாட்கள் கடந்துள்ளன. இந்தக் குழு அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதிய அமைப்பு, ஓய்வூதியங்கள், சலுகைகள், பிற சலுகைகளை ஆய்வு செய்து பரிந்துரை செய்யும். இதில் முக்கியமாக ஃபிட்மென்ட் ஃபேக்டர் (fitment factor) மூலம் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதிய உயர்வு அறிமுகப்படுத்தப்படும்.
மேலும் நவம்பர் மாத இறுதியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இருந்த மிகப்பெரிய குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வந்தது மத்திய அரசு, அதாவது DA தொகையை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பதற்கான ஆலோசனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து, இத்தகைய திட்டம் ஏதுவும் தற்போது ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று விளக்கம் கொடுத்தது.
மத்திய அரசு ஜூலை 1, 2025 முதல் DA மற்றும் DR அளவை 55 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
8வது சம்பள கமிஷன் பரிந்துரை 2026 ஜனவரி 1 முதல் செயல்படுத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 30-34 சதவீத ஊதிய உயர்வு வரலாம் என்று நிபுணர்கள் கணிக்கித்துள்ளனர்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications