மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கான 8ஆவது சம்பள கமிஷன் பணிகள் வேகம் எடுக்க தொடங்கி இருக்கின்றன. மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் அமைத்து ஊதிய உயர்வும் ஓய்வூதிய உயர்வும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து 8ஆவது சம்பள கமிஷன் அடிப்படையில் புதிய சம்பளம் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்திருக்க வேண்டும்.
சம்பள கமிஷன் அமைப்பதை மத்திய அரசு தாமதப்படுத்திவிட்டது. கடந்தாண்டு இறுதியில் தான் மத்திய அரசு சம்பள கமிஷன் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு, கமிஷனின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்தது. மேலும் சம்பள கமிஷனுக்கான காலக்கெடுவையும் நிர்ணயம் செய்தது. இந்த சூழலில் 8ஆவது சம்பள கமிஷன் தொடர்பான அதிகாரப்பூர்வ இணையதளம் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது.

https://8cpc.gov.in/ என்பது தான் 8ஆவது சம்பள கமிஷன் தொடர்பான அதிகாரப்பூர்வ இணையதளம். இந்த இணையதளத்திற்கு சென்று மத்திய அரசு ஊழியர்கள் சம்பள கமிஷன் தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள அரசு வழிவகை செய்திருக்கிறது. இதில் சம்பள கமிஷன் தலைவர், உறுப்பினர்களின் விவரங்களும் அரசு வழங்கியிருக்கும் குறிப்புரைகள் என்னென்ன என்பன உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்கின்றன.
மிக முக்கியமாக இதில் மத்திய அரசு ஊழியர்கள் தங்களுடைய தங்கள் தரப்பு கருத்துக்களை தெரிவிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் 18 கேள்விகள் அடங்கிய ஒரு கேள்வித்தாலும் வழங்கப்பட்டிருக்கிறது. அதனை கிளிக் செய்து மத்திய அரசு ஊழியர்கள் தங்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் பரிந்துரைகளை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசு ஊழியர்கள் மட்டும் இல்லாமல் பல்வேறு அமைச்சகங்களும், அரசு ஊழியர்களுக்கான யூனியன்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களும் இதில் தங்களுடைய பரிந்துரைகளையும் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. Mygov.in என்ற இணையதள பக்கத்தில் இந்த 18 கேள்விகள் அடங்கிய லிங்க் இருக்கும். அதனை கிளிக் செய்து நம்முடைய கருத்துக்களை பதிவு செய்யலாம். பல்வேறு அமைச்சகங்கள், பல்வேறு துறைகள் , மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் , அரசு ஊழியர்கள் , அரசு ஊழியர்களுக்கான யூனியன்கள் , ஓய்வூதியதாரர்கள் மற்றும் தனி நபர்கள், கல்வியாளர்களும் தங்களுடைய கருத்துக்களை அதில் பதிவு செய்யலாம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதில் கருத்து பதிவு விடக்கூடிய நபர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த கருத்துக்களின் அடிப்படையில் சம்பள கமிஷன் தன்னுடைய முடிவுகளை எடுக்கும் என கூறப்பட்டிருக்கிறது. மார்ச் 16ஆம் தேதி வரை இதில் தங்களுடைய கருத்துக்களையும் பரிந்துரைகளையும் வழங்கலாம்.
எந்த மாதிரியான ஃபிக்மன்ட் ஃபேக்டர் இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் , ஒரு அரசு ஊழியருக்கான சம்பளம் எதை வைத்து முடிவு செய்யப்பட வேண்டும் என நினைக்கிறீர்கள், ஊதிய உயர்வு அனைத்து பே ஸ்கேலுக்கும் ஒரே அளவாக இருக்க வேண்டுமா, பணவீக்கம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு தான் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டுமா என்பன உள்ளிட்ட கேள்விகள் இடம் பெற்றிருக்கின்றன.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications