இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இந்தியா முழுவதும் 25 வழித்தடங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ஒவ்வொரு அதிவேக ரயில்களையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
தற்போதைய பாஜக ஆட்சிக்கு இந்த நவீன மற்றும் விரைவு ரயில்களின் முக்கிய சாதனையாகக் கருதப்படுகிறது. இருப்பினும், ஜூலை 2023 இல் கடைசியாக வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்ததில் இருந்து இரண்டு மாதங்கள் புதிய ரயில்கள் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்படவில்லை.

இதற்கிடையில், இந்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், புதிய காவி நிற வந்தே பாரத் எக்ஸ்பிரஸை வெளியிட்டார். இந்திய ரயில்வே இப்போது 9 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் விரைவில் தொடங்க தயாராகி வருவதாக தெரிகிறது.
இந்த 9 ரயில்களிலும் இயக்குவதற்கான ரேக்குகளை சென்னை இன்டக்ரல் கோச் பேக்டரி (ஐசிஎஃப்) தயார் செய்து வருகிறது. இவற்றில், விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் அதிகபட்ச ரயில்களைப் பெறும். ஒரு பிரமாண்டமான விழாவில் அனைத்து புதிய ரயில்களையும் ரயில்வே துறை ஒன்றாக அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வழித்தடங்கள்-
வழித்தடம் 1: இந்தூர் - ஜெய்ப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
வழித்தடம் 2: ஜெய்ப்பூர் - உதய்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
வழித்தடம் 3: பூரி - ரூர்கேலா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
வழித்தடம் 4: பாட்னா-ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
வழித்தடம் 5: ஜெய்ப்பூர்-சண்டிகர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் இந்த ஐந்து வழித்தடங்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மூன்று வழித்தடங்கள் தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ளன, இருப்பினும் பெயர்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. கடைசியாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எங்கு இயக்கப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இன்றைய நிலவரப்படி, இந்தியா முழுவதும் 25 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 50 வழித்தடங்களை உள்ளடக்கியது. ஒவ்வொன்றும் 25 முறை அப் அண்ட் டவுன் இயக்கப்படுகின்றன. இவற்றில் நான்கு வடக்கு மண்டலத்திலும், 3 தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களிலும், 2 மேற்கு, மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு ரயில்வே மண்டலங்களிலும், 1 தென்கிழக்கு மத்திய, கிழக்கு, கிழக்கு கடற்கரை, தென் மத்திய, தென்கிழக்கு, வடகிழக்கு எல்லை, கிழக்கு மத்தியிலும் தென் மேற்கு மற்றும் வடகிழக்கு ரயில்வே மண்டங்களி்லும் உள்ளன.
முன்னதாக ஜி20 நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் குழு காந்திநகர்-மும்பை வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணம் செய்து பயண அனுபவம் குறித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ட்விட்டரில் வீடியோவைப் பகிர்ந்துள்ள மேற்கு ரயில்வே, உலகத் தரம் வாய்ந்த, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட #VandeBharatExpress இல் காந்திநகர் தலைநகரில் இருந்து இந்தியாவின் நிதி மையமான மும்பைக்கு பயணம் செய்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு அதிவேக ரயில் பெட்டிகளை தயாரிப்பதற்கான திட்டம் 2017 ஆம் ஆண்டின் மத்தியில் தொடங்கியது. 18 மாதங்களுக்குள், ICF சென்னை ரயில்-18 ஐ நிறைவு செய்தது. இந்தியாவின் முதல் செமி-ஹைஸ்பீடு ரயில் அதன் மேட்-இன்-இந்திய நிலையை வெளிப்படுத்துவதற்காக ஜனவரி 2019 இல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எனப் பெயர் மாற்றப்பட்டது. கோட்டா-சவாய் மாதோபூர் பிரிவில் அதிகபட்சமாக மணிக்கு 180 கிமீ வேகத்தை ரயில் எட்டியது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications