சென்னை: கொரோனா பெருந்தொற்று காலத்தில் வொர்க் ஃபிரம் ஹோம் எனப்படும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் நடைமுறை உலகம் முழுவதும் அமலுக்கு வந்தது. கொரோனா பெருந்தொற்று முடிந்த பிறகு நிறுவனங்கள் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என கூறுகின்றன. ஆனால் ஊழியர்கள் தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யலாமா அல்லது அலுவலகத்துக்கு தான் வர வேண்டுமா என்பது குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
கேபிஎம்ஜி என்பது இந்தியாவை சேர்ந்த ஒரு கன்சல்டன்சி நிறுவனம் ஆகும். இது இந்தியாவை சேர்ந்த 125 தலைமை செயல் அதிகாரிகளிடம் ஆய்வு நடத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் ஆண்டுக்கு 500 மில்லியன் டாலருக்கும் அதிகமான வருமானம் ஈட்டும் நிறுவனங்களின் தலைவர்களாக இருப்பவர்கள். இதன்படி இந்தியாவை சேர்ந்த 91% தலைமை செயல் அதிகாரிகள் நேரடியாக அலுவலகத்திற்கு வந்து பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதலாக பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றை வழங்க தயாராக இருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

இதுவே சர்வதேச அளவில் 87 சதவீத தலைமை செயல் அதிகாரிகள் நேரடியாக நாள்தோறும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு கூடுதல் ஊதியம் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றனர். சர்வதேச அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் இந்த எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் உலக அளவில் 83 சதவீத தலைமை செயல் அதிகாரிகள் ஊழியர்கள் அனைவரும் முழுமையாக அலுவலகத்திற்கு வந்து பழைய நடைமுறைப்படி பணிபுரிவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் இந்தியாவில் 78% தலைமை செயல் அதிகாரிகள் அனைத்து ஊழியர்களும் மூன்று ஆண்டுகளுக்குள் முழுமையாக அலுவலகத்திற்கு திரும்பி விடுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் கூறுகிறது.
மேலும் இந்தியாவை சேர்ந்த தலைமை செயல் அதிகாரிகள் தற்போது எப்படி நாம் தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு முதலீடு செய்கிறோமோ அதற்கு நிகராக ஊழியர்கள் திறன்களை மேம்படுத்துவதற்கும் முதலீடு செய்ய வேண்டும் என 50% பேர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
எனவே பெரும்பாலான உயரதிகாரிகள் ஊழியர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு வந்து பணிபுரிவதையே விரும்புகின்றனர், தினமும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிபவர்களுக்கு கூடுதலாக பதவி உயர்வு, ஊதிய உயர்வு மற்றும் ஊக்க தொகை உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதும் இதில் தெரிய வருகிறது. ஏனெனில் அலுவலகம் வந்து பணிபுரியும் போது ஊழியர்களின் செயல் திறனும் புதுமையாக சிந்திக்கும் திறனும் அதிகரிக்கிறதாம்.
Written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications