இந்தியாவின் பழங்கால மன்னர்கள் தங்கள் பணியாளர்களுக்கு பரிசுகளை வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். நகைகள், நிலம், பொருள் என பல்வேறு வகையான பரிசுகளையும் இதற்கு முன்னர் நம் நாட்டை ஆண்ட அரசர்கள் வழங்கியுள்ளனர். அதே போல தற்போதும் ஒரு தொழிலதிபர் தனது கனவு வீட்டை கட்டிய காண்ட்ராக்டருக்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் கைக் கடிகாரத்தை பரிசாக வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
NDTV-யின் அறிக்கையின்படி, குர்திப் தேவ் பாத் என்ற தொழிலதிர் பஞ்சாபின் ஜிராக்பூரில் உள்ள பரந்து விரிந்த 9 ஏக்கர் தோட்டத்தில் தனது வீட்டைக் கட்டிய ராஜிந்தர் சிங் ரூப்ரா என்ற கான்ட்ராக்டரின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் ரோலக்ஸ் கடிகாரத்தை பரிசளித்துள்ளார்.

ராஜிந்தர் சிங் ரூப்ராவுக்கு வழங்கப்பட்ட ரோலக்ஸ் ஆயிஸ்டர் பெர்பெச்சுவல் ஸ்கை-டிவெல்லர் மாடல் கடிகாரம், பாரம்பரிய ராஜஸ்தானி கோட்டையைப் போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த கடிகாரத்தின் விலை சுமார் ரூ.18 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குர்திப் தேவ் பாத்தின் வீடு நவீன கால கோட்டையைப் போல காட்சியளிக்கிறது. வீட்டின் நுழைவாயிலில் இரண்டு சிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பசுமையான தோட்டங்களுக்கு இடையே ஒரு பிரமாண்டமான நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டை கட்ட மொத்தமாக 2 ஆண்டுகள் ஆகியுள்ளது. ஒவ்வொரு நாளும் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த வீட்டை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
"இது வெறும் வீடு அல்ல, இது ஒரு பிரமாண்டத்தின் வடிவமைப்பு, கவனமாக வடிவமைக்கப்பட்டு, காலத்தால் அழியாத நேர்த்தியை பிரதிபலிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது
காலக்கெடுவுக்குள் இந்த வீட்டை கட்டி முடிப்பதற்கான அவரது அர்ப்பணிப்பு, வீட்டின் நேர்த்தியான வடிவமைப்பு அனைத்தும் நான் கேட்டதை விட அதிகமாக உள்ளது. வீட்டின் வடிவமைப்பு முழுவதும் என் குடும்பத்தின் எதிர்பார்ப்புகளை மீறி இருக்கிறது என்று குர்திப் தேவ் பாத் வீட்டின் வடிவமைப்பு குறித்து பாராட்டியுள்ளார். பஞ்சாபின் ஷாகோட்டைச் சேர்ந்த ராஜிந்தர் சிங் ரூப்ரா, இவ்வளவு பெரிய சொத்தில் பணிபுரிவது சவாலானதாக இருந்ததாகக் கூறியுள்ளார்.
தனது பணியை சிறப்பாக செய்து முடித்த காண்ட்ராக்டருக்கு கிடைத்த பரிசு, அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சொன்ன நேரத்திற்குள் வீட்டைக் கட்டி டெலிவரி செய்ததற்காக, அந்த வீட்டின் உரிமையாளர் ரூ.18 லட்ச ரூபாய் மதிப்பிலான ரோலக்ஸ் வாட்ச்சை பரிசாக வழங்கியுள்ள சம்பவம் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று பாராட்டப்பட்டு வருகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications