பெங்களூருவில் கார் ஓட்டுநர் ஒருவர் தன்னுடைய உரிமையாளரின் 1.5 கோடி ரூபாய் பணத்தை திருடி சென்று கோயில்களுக்கு தானமாக வழங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரை சேர்ந்த 45 வயதானவர் ராஜேஷ். வட பெங்களூரில் வசிக்கும் இவர் கடந்த 10 ஆண்டுகளாக பட்டய கணக்காளராக இருக்கும் ஒரு நபருக்கு கார் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். கடந்த மே ஐந்தாம் தேதி அந்த பட்டய கணக்காளர், ராஜேஷ் இடம் ஒரு பையை கொடுத்து அதில் 1.5 கோடி ரூபாய் பணம் இருப்பதாகவும் பத்திரமாக அதை காரில் வைக்கும் படியும் கூறி இருக்கிறார்.

இதனை அடுத்து சிறிது நேரம் கழித்து வீட்டில் இருந்து வெளியே வந்த பட்டய கணக்காளருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அங்கே காரும் இல்லை தன்னுடைய ஓட்டுனரும் இல்லை. இதனை அடுத்து தன்னுடைய அலுவலகத்துக்கு சென்ற அவர், அங்கேயும் கார் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து ஓட்டுநர் ராஜேஷூக்கு தொலைபேசியில் அழைத்துள்ளார். அவர் தான் மருந்தகத்தில் மருந்து வாங்க வந்திருப்பதாகவும் 10 நிமிடங்களில் வந்துவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் அவர் திரும்ப வரவில்லை எனவே அந்த பட்டய கணக்காளர் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார் . இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மே 9ஆம் தேதி ராஜேஷ் காவல்துறையினரிடம் சரணடைந்தா. பின்னர் காவல்துரையினர் ராஜேஷை கைது செய்தனர் இதனை அடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்டு இருக்கும் நபர் புகார் அளித்த நபரிடம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்து வருபவர் எனக் கூறியிருக்கிறார்.
தன்னுடைய உரிமையாளரிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு காரில் தப்பி ஓடிய ஓட்டுநர், காரை கொண்டு சென்று பட்டய கணக்காளரின் அலுவலகத்தில் விட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில்பணத்தை திருடி சென்றாராம். பின்னர் சில கோயில்களுக்கு சென்றாராம். தான் செய்த குற்றத்தை அவர் ஒப்பு கொண்டதை அடுத்து காவல்துறையினர் அவரை காவலில் எடுத்து விசாரித்தனர்.
அந்த விசாரணையில் தான் திருடி சென்ற ஒன்றரை கோடி ரூபாய் பணத்தில் ஒரு லட்சம் ரூபாயை தன்னுடைய குடும்பத்திற்கு செலவு செய்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் ஒரு குறிப்பிட்ட தொகையை கோயில்களுக்கு நன்கொடையாக வழங்கினாராம். இதனை அடுத்து காவல்துறையினர் அவர் செலவு செய்த தொகை மற்றும் கோயில்களுக்கு தானமாக வழங்கிய தொகை போக மீதமுள்ள தொகையை பெற்று உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications