ஒரு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த நபர் அங்கு வேலைக்கு சேர்ந்த பிறகு தனக்கு முகப்பரு வந்ததை காரணமாக கூறி வேலையை ராஜினாமா செய்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய நபர்கள் அங்கே நடக்கும் நிகழ்வுகளை ரெடிட் தளத்தில் பதிவு செய்வார்கள் . அந்த வகையில் ஒரு ரெடிட் பயனாளர் தன்னுடைய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த ஒரு நபர் ஒரே மாதத்தில் அந்த வேலையை விட்டு விட்டதாகவும் அதற்கு தனக்கு முகப்பருக்கள் வந்ததே காரணம் என்றும் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள இந்த செய்தியின் படி ஒரு ஆலையில் வேலை செய்யக்கூடிய நபர் ரெடிட் தளத்தில் இந்த பதிவினை வெளியிட்டுள்ளார்.

இயந்திரங்களை சுத்தம் செய்யும் வேலைக்காக தன்னுடைய நிறுவனத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு புதிதாக ஒருவரை வேலைக்கு சேர்த்தார்கள் என்றும் தினமும் எத்தனால் போன்ற ரசாயனங்களை கொண்டு இயந்திரங்களை சுத்தம் செய்ய வேண்டிய வேலை அவருக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு மாத காலம் பயிற்சி பெற்ற அந்த நபர் திடீரென ஒரு நாள் நான் இனி வேலைக்கு வரமாட்டேன் , இந்த வேலையால் எனக்கு உடல்நல பிரச்சினை வந்துவிட்டது என கூறியுள்ளார்.
அப்படி என்ன உடல்நல பிரச்சினை ஏற்பட்டது என கேட்டதற்கு எனக்கு முகப்பரு வந்துவிட்டது என கூறினாராம். அந்த நபர் இதற்கு முன்பு எனக்கு ஒரு முறை கூட முகப்பரு வந்ததே கிடையாது ஆனால் இங்கு வேலைக்கு சேர்ந்த பிறகு இந்த ரசாயனங்களை கையாள்வதால் எனக்கு முகப்பரு வருகிறது எனவே நான் இந்த வேலையை ராஜினாமா செய்கிறேன் என கூறி இருக்கிறாராம்.
அந்த ஊழியர் பணிக்கு சேர்ந்து ஒரு மாதமே ஆகியிருந்தாலும் அங்கு இருப்பவர்களிடம் தன்னுடைய ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்காக புகழ்பெற்றவராக மாறியிருக்கிறார். முகப்பருவை காரணம் காட்டி அவர் வேலையை ராஜினாமா செய்தது பலரது கவனத்தை பெற்றுள்ளது.
ஒரு பயனர் எனக்கு கூட வேலைக்கு சேர்ந்த பிறகு தான் நரைமுடி வந்துவிட்டது நான் வேலையை விட வேண்டிய நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன் என கூறியுள்ளார். ஒரு பயனர், இயந்திரங்களை சுத்தம் செய்த பிறகு கைகளை கழுவ வேண்டும் என்பது கூடவா அவருக்கு தெரியாது என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு பயனர் முகத்தில் முகப்பரு வந்துவிட்டது என்பது ஒரு சாதாரண காரணம்தான் அவருக்கு இந்த வேலை பிடிக்கவில்லை அதற்கு காரணம் தேடி இருக்கிறார் எதுவும் கிடைக்காததால் தான் இதை ஒரு காரணமாக கூறியிருக்கிறார் என பதிவு செய்துள்ளார். ஒரு சிலர் பல்வேறு நிறுவனங்களில் இது போல ஊழியர்கள் நீண்டகால பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர் அதை முன்கூட்டியே அறிந்து இவர் வேலையை விட்டு இருப்பது நல்ல விஷயம் தானே என கூறியிருக்கின்றனர்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications