TATA sons-ன் ரூ.1.24 லட்சம் கோடி பங்குகளை முறைகேடாக தன் பெயருக்கு மாற்றினாரா நஸ்லி வாடியா?

மும்பை: இந்தியாவின் புகழ்பெற்ற தொழில் குழுமம் தான் பாம்பே டையிங். பாம்பே டையிங் குழுமத்தின் தலைவராக இருக்கும் நஸ்லி வாடியா முறைகேடாக டாடா சன்ஸ் நிறுவன பங்குகளை கையகப்படுத்தி விற்பனை செய்வதாக பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மும்பை உயர்நீதிமன்றத்தில் பங்கஜ் பத்னி என்பவரால் இந்த பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் நஸ்லி வாடியா முறைகேடாக டாடா சன்ஸ் குழுமத்திலிருந்து 8.69% பங்குகளை விற்பனை செய்து விட்டார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது .

TATA sons-ன் ரூ.1.24 லட்சம் கோடி  பங்குகளை முறைகேடாக தன் பெயருக்கு மாற்றினாரா நஸ்லி வாடியா?

இந்தியாவில் இயங்கி வந்த தின்சா என்ற குழுமம் பின்னாளில் அதே பெயரில் அறக்கட்டளைகளை தொடங்கியது. தின்சா குழுமம் 1920களில் டாடா குழுமத்திற்கு கடன் வழங்கியது. அந்த கடனை திரும்ப செலுத்த முடியாததால் டாடா குழுமம் அதற்கு பதிலாக டாடா சன்ஸில் இருந்து 8.69% பங்குகளை வழங்கியது.

இந்நிலையில் தின்சா குடும்பம் பின்னாளில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து விட்டது. இந்நிலையில் தின்சா குழுமத்துக்கு சொந்தமான இருந்த டாடா சன்ஸ் பங்குகளை போலியான ஆவணங்களை தயாரித்து நஸ்லி வாடியா தன்னுடைய பெயருக்கு மாற்றி பின்னர் விற்பனை செய்து விட்டார் என அந்த பொதுநல வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 1920 களில் தின்சா குழுமத்திற்கு சொந்தமாக டாடா சன்ஸ் வழங்கிய 8.69% பங்குகள் 1970களில் வாடியா பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது.

தின்சா அறக்கட்டளையின் இந்திய பிரிவுக்கு நஸ்லி வாடியா தலைவரான போது தான் இந்த பங்கு பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது. இவ்வாறு நஸ்லிவாடியா முறைகேடாக மாற்றிக் கொண்ட பங்குகளின் இன்றைய மதிப்பு 1.24 லட்சம் கோடி ரூபாய் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தின்சா அறக்கட்டளைக்கு சொந்தமான இந்த பங்குகள் நியூயார்க்கை சேர்ந்த இரண்டு அமெரிக்க அறக்கட்டளைகளுக்கு என எழுதி வைக்கப்பட்டுள்ளது. அது தவிர மலாத் பகுதியில் 1000 ஏக்கர் நிலமும் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலமும் தனக்கு சொந்தமானது என கூறி வாடியா அவற்றை கையகப்படுத்திக் கொண்டார் என மனுவில் கூறப்பட்டுள்ளது. நஸ்லி வாடியா போலியான ஆவணங்களை தயாரித்து இந்த சொத்துக்களை கையகப்படுத்தி விட்டார் என பொதுநல வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது .

2003ஆம் ஆண்டில் ஒப்பந்தம் ஒன்றின் மூலம் இந்த சொத்துகள் தனக்கு கிடைத்ததாக வாடியா குறிப்பிட்டார், ஆனால் கூறும் அந்த தேதியில் தின்சா குழும வாரிசுகளில் ஒருவர் அமெரிக்க மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை உயர்நீதிமன்றம் இது தொடர்பாக விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு ஆணையிட்டுள்ளது. ஒருவேளை இந்த குற்றச்சாட்டு நிரூபணமானால் நஸ்லி வாடியாவுக்கு பெரிய பின்னடைவாக இருக்கும்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+