எச்சரிக்கை.. ஒரு இந்திய நிறுவனத்தின் மீது ஹேக்கர்கள் வாரத்துக்கு 1565 தாக்குதல் நடத்துகிறார்களாம்!

டெல்லி: இந்திய நிறுவனங்கள் அதிகளவில் ஹேக்கர்களால் இலக்கு வைக்கப்படுவதாக ஒர் ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. அதுவும் எந்த அளவுக்கு எனில், வாரத்தில் ஒரு இந்திய நிறுவனத்தின் மீது 1565 முறை தாக்குதல் நடத்தப்படுகிறதாம்.

இது கடந்த ஆறு மாதத்தில் ஒரு நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட சராசரியான தாக்குதலாம்.

உலகளவில் கூட ஒரு நிறுவனத்தின் மீது சராசரியாக 474 முறைதான் தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்படும் நிலையில், இந்திய நிறுவனங்களின் மீதான இலக்கு மிக அதிர்ச்சியளிக்கும் ஒரு விஷயமாகவே உள்ளது.

இணையம் வழியாக பரவும் ஹேக்கர்கள்

இணையம் வழியாக பரவும் ஹேக்கர்கள்

இஸ்ரேலிய சைபர் செக்யூரிட்டி நிறுவனமான செக் பாயின்ட் ரிசர்ச் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்தியாவில் 93 சதவிகிதம் தீங்கிழைக்கும் வைரஸ்கள் இணையம் வழியாக பரவுவதாக இந்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இது உலகளவில் 35% தீங்கிழைக்கும் வைரஸ்கள் உடன் ஒப்பிடும்போது இது மிக அதிகமாகும்.

எளிதாக இந்திய நிறுவனங்கள் பாதிப்பு

எளிதாக இந்திய நிறுவனங்கள் பாதிப்பு

இந்தியாவில் மிகவும் பொதுவான பாதிப்பு என்பது தகவல்களை சுரண்டும் ஒரு வகையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் Check Point's 2020 என்ற இந்த அறிக்கையில், 64% நிறுவனங்கள் மிக எளிதாக இந்த ஹேக்கர் மூலம் பாதிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக எக்ஸ்எம்ரிக் மூலம் 17% நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாகவவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சைபர் கிரைம் அமைப்புகள் இதை துரிதப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இது 2020ம் ஆண்டிலும் தொடரலாம் என்றும் கூறப்படுகிறது.

உங்களது தகவல்கள் திருட்டு

உங்களது தகவல்கள் திருட்டு

அதிலும் இந்த இணைய மோசடிகளில் மால்வேர்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியாக இது வைரஸ் என்று அழைக்கப்படும். மால்வேர் என்பது உங்கள் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் சாதனம் ஒன்றின் இயக்கத்தினைக் கெடுக்கும் வகையில் எழுதப்பட்ட டிஜிட்டல் குறியீடுகள் அடங்கிய ஒன்றாகும். இவை நாம் விருப்பப்படாத அல்லது மேற்கொள்ள விரும்பாத செயல்பாடுகளை இவை நம் சாதனங்களில் மேற்கொள்ளும். எடுத்துக்காட்டாக உங்கள் கம்ப்யூட்டர்களில் இருந்து மெயில், வங்கி கணக்குகள் குறித்த தகவல்களை திருடுவது ஆகும்.

பாட்நெட் மூலம் தகவல் திருட்டு

பாட்நெட் மூலம் தகவல் திருட்டு

இதே பாட்நெட் மூலம் உலகளவில் 28% நிறுவனங்கள் பாட்நெட் செயல்பாட்டால் பாதிகப்பட்டுள்ளதாகவும், இது கடந்த 2018வுடன் ஒப்பிடும்போது 50% அதிகம் என்றும் கூறப்படுகிறது. சரி அதென்ன பாட்நெட். இதுவும் ஒரு வைரஸ் தான். இந்த வைரஸ் தான் பற்றிக் கொண்டுள்ள கம்ப்யூட்டர்களிலிருந்து பாஸ்வேர்ட், யூசர் நேம் உட்பட அனைத்து பர்சனல் தகவல்களையும் திருடி, இதனைத் தயாரித்து அனுப்பிய ஹேக்கர்களின் கம்ப்யூட்டர்களுக்கு அனுப்பும். பாட்நெட் என்பது இந்த வைரஸ் பரவி உள்ள கம்ப்யூட்டர் நெட்வொர்க்கினைக் குறிப்பிடுகிறது. இந்த நெட்வொர்க்கை ஹேக்கர்கள் தள்ளி உள்ள ஓர் இடத்தில் தங்களின் மையக் கம்ப்யூட்டர் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எச்சரிக்கையா இருங்க பாஸ்

எச்சரிக்கையா இருங்க பாஸ்

தற்போதுள்ள நிலையில் 90% மேற்பட்ட நிறுவனங்கள் கிளவுட் சேவைகளையே பயன்படுத்துகின்றன. ஆனால் இதில் 67% பாதுகாப்பு குழுக்கள் தங்கள் கிளவுட் உள்கட்டமைப்பு பாதுகாப்பு மற்றும் இணக்கம் ஆகியவற்றில் அவர்களின் பார்வை இல்லை என்றும் புகார் கூறுகின்றன. ஆக நிறுவனங்களாகட்டும்,தனி நபர்களாகட்டும் இணைய திருட்டுகளில் இருந்து தங்களை பாதுகொள்ள எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+