ஹைதராபாத்தில் ஸ்டாக் புரோக்கிங் நிறுவனம் நடத்தி 7000 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பல்வேறு முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிபி ஸ்டாக் புரோக்கிங் (DB Stock Broking) என்ற ஒரு நிறுவனம் ஹைதராபாத், பெங்களூர், மும்பை, கௌஹாத்தி மற்றும் நல்பாரி ஆகிய நகரங்களில் அலுவலகங்களை அமைத்து பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகளில் ஈடுபட்டு வந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் மீது ஹைதராபாத்தை சேர்ந்த பெரும்பாலான முதலீட்டாளர்கள் பொருளாதார முறைகேடு பிரிவில் புகார் வழங்கி வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி 37 வயதான மென்பொருள் நிறுவன ஊழியர் ஒருவர் ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் டிபி ஸ்டாக் புரோக்கிங் என்ற நிறுவனத்தில் 11 லட்சம் ரூபாயை அவர் முதலீடு செய்வதாகவும் அந்த நிறுவனம் தனக்கு உறுதி அளித்த லாபத்தையும் வழங்கவில்லை தன்னுடைய முதலீடு தொகையையும் வழங்கவில்லை என தெரிவித்துள்ளார். இந்த நிறுவனம் அசாம் மாநிலத்தை சேர்ந்த தீபங்கர் பர்மன் என்பவருக்கு சொந்தமானது.

இந்த நிறுவனம் 2018ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இது பல்வேறு நகரங்களிலும் வாடிக்கையாளர்களை கொண்டு இருக்கிறது. அதாவது முதலீட்டு தொகைக்கு ஓராண்டுக்கு 120 சதவீதம் வட்டி ,அரையாண்டுக்கு 54 சதவீதம் வட்டி, மாதந்தோறும் 7 சதவீதம் வட்டி என விளம்பரம் செய்து முதலீட்டாளர்களிடமிருந்து கணிசமான தொகை பெற்றுள்ளது. ஆனால் இந்த நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து முதலீட்டாளர்களுக்கு வட்டியையும் வழங்கவில்லை, முதலீட்டு தொகையையும் திரும்ப வழங்கவில்லை.
இதனிடையே ஐதராபாத்தில் ஏராளமான முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தின் மீது புகார் அளித்த வண்ணம் உள்ளனர். சிலர் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து தங்களுக்கு வட்டி பணமும் வரவில்லை, முதலீட்டு தொகையும் திரும்ப கிடைக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
டிபி புரோக்கிங் நிறுவன உரிமையாளரான தீபங்கர் பர்மன், கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதியிலிருந்து தலைமறைவாகியுள்ளார். அவர் தற்போது வெளிநாடு தப்பி சென்று தஞ்சம் அடைந்து இருப்பதாகவும், ஆஸ்திரேலியாவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே அவரை தாயகம் அழைத்து வந்து விசாரணை நடத்தி தங்களுடைய பணத்தை மீட்டு தர வேண்டும் என ஏராளமான முதலீட்டாளர்கள் புகார் அளித்துள்ளனர். சுமார் 27,000 பேர் இவரிடம் 7000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்து ஏமாந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
Story Written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!



Click it and Unblock the Notifications