பெங்களூரு: இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் பெங்களூரில் பல்வேறு முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. பெங்களூரில் வசிக்கக்கூடிய ஐடி ஊழியர்கள் , ஸ்டார்ட் அப் ஊழியர்கள் அவ்வப்போது பெங்களூருவில் தங்களுக்கு கிடைக்கும் அனுபவங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார்கள். அவற்றில் சில வைரலாகும் சில விஷயங்கள் தனித்துவமானதாக இருக்கும்.
அப்படித்தான் பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்திருக்கிறது. பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரக்கூடிய அந்த பெண் வழக்கம் போல ஊபரில் வாடகைக்கு காரை புக் செய்திருக்கிறார். வாடகை காரும் வந்திருக்கிறது, காரில் ஏறி ஓடிபி கூறிய போது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் ஓட்டுநர் இருக்கையில் இருந்தது அவருடைய நிறுவனத்தில் டீம் லீடராக இருக்கும் ஒரு நபர் .

டீம் லீடராக வேலை பார்க்கும் நீங்கள் ஏன் வாடகை கார் ஓட்டுகிறீர்கள் என அவர் கேட்டதற்கு எனக்கு பணி நேரம் போக போர் அடிக்கிறது அதிலிருந்து மீள வேண்டும் என்பதற்காகவே ஊபரில் ஓட்டுநராக வேலை செய்கிறேன் என கூறினாராம். இதனை தன்னுடைய நண்பருக்கு அந்த பெண் ஊழியர் வாட்ஸ் அப் வழியாக பகிர்ந்திருக்கிறார். இந்த ஸ்க்ரீன்ஷாட்டை அவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் .இது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது.
ஆயிரக்கணக்கானவர்கள் இந்த பதிவினை பார்த்திருக்கின்றனர் பலரும் இந்த பதிவுக்கு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றனர். ஒரு பயனர் எதிர்பாராததை வழங்கக்கூடியது தான் பெங்களூரு நகரம் என பதிவு செய்திருக்கிறார், ஒரு பயனர் பெங்களூரு வாழ் மக்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு நேரம் கிடைக்கிறது போரடிக்கும் அளவிற்கு எல்லாம் நேரம் இருக்கிறதா என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ஒரு பயனர் போக்குவரத்து நெரிசலை பார்த்து கூடவா இவர் டைம் பாஸுக்காக ஓட்டுனராக வேலை செய்கிறார் என சந்தேகத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார் .ஒரு பயனர் இதே போல தங்களுக்கு நிகழ்ந்த அனுபவங்களையும் எழுதியுள்ளனர். ஒரு நபர் கூடுதலாக பணம் கிடைப்பது நன்மை தானே என கூறியுள்ளார். பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் வாழ்பவர்களுக்கு மட்டுமே தெரியும் எவ்வளவு சம்பளம் கிடைத்தாலும் அது பத்தாது எனவே தான் இந்த நபர் இப்படி ஒரு வேலையை செய்கிறார் ஆனால் அதனை விட்டுக் கொடுத்த கூடாது என்பதற்காக இப்படி ஒரு காரணத்தை கூறியிருக்கிறார் என ஒரு பயனர் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

துபாயில் சிக்கிதவித்த பிவி.சிந்து, இந்திய திரும்பினார்.. "3 நாட்கள்" பெங்களூரில் இறங்கியதும் செய்த விஷயம்..!!

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications