ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் ஊதியம் தந்த வேலையை கைவிட்டு ஃபிரெஸ்ஸராக பணிக்கு சேர்ந்த ஒரு இளைஞர், முன்பை விட தான் தற்போது மகிழ்ச்சியுடன் இருப்பதாக பதிவு செய்துள்ளார்.
வேலைக்கு செல்பவர்கள் பொதுவாக அடுத்தடுத்து பதவி உயர்வு பெற வேண்டும், அதற்கு ஏற்றபடியாக ஊதிய உயர்வு பெற வேண்டும் என்று எண்ணுவது தான் வழக்கம். ஆனால் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் ஊதியத்தில் தான் பார்த்து வந்த வேலையை விடுத்து ஒரு நபர் ஃபிரெஸ்ஸராக ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்த ஒரு இளைஞர் கேம்பஸ் இன்டர்வியூ வாயிலாக ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சென்றார். அந்த வேலைக்கு செல்ல தொடங்கி ஓராண்டு காலம் ஆகிவிட்டது. இந்த வேலையில் தன்னுடைய திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லை, ஒரே மாதிரியான வேலையாக இருக்கிறது என்பதை உணர்ந்த அவர், தனிப்பட்ட முறையில் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையிலான வேலைக்கு செல்ல வேண்டும் என முடிவெடுத்தாராம்.
இதனை அடுத்து தன்னுடைய வேலையை கைவிட்டு 6 மாதங்களுக்கு பின் ஒரு சிறிய நிறுவனத்தில் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் சம்பளத்தில் ஃபிரெஸ்ஸராக வேலைக்கு சேர்ந்துள்ளார். தான் இதற்கு முன்பு வாங்கிய சம்பளத்தில் பாதி சம்பளம் தான் இந்த வேலையில் கிடைக்கிறது என்றாலும் தான் வேலை செய்யக்கூடிய நிறுவனத்தில் தனக்கு முக்கியமான பணி வழங்கப்பட்டிருப்பதால் அதன் மூலம் தனக்கு மிகப்பெரிய பொறுப்புணர்வு தரப்பட்டுள்ளதாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.
இந்த சிறிய நிறுவனத்தில் பல்வேறு விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் அவர் கூறுகிறார். இது தொடர்பாக பதிவிட்டு இருக்கும் அந்த நபர் புதிதாக வேலைக்கு வரக்கூடிய இளைஞர்கள் தங்களுடைய திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.
திறன்களை வளர்த்து கொள்ளாமல் எடுத்த உடனே அதிக சம்பளத்தில் வேலையில் அமருவதற்கு முக்கியத்துவம் தரக்கூடாது என அறிவுரை வழங்கியுள்ளார். சௌகரியமான ஒரு இடத்திலேயே வேலை செய்வது நம்மை ஓரிடத்திலேயே முடக்கிவிடும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அவருடைய இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. பலரும் தங்களுடைய பணி அனுபவங்களை பதிவு செய்துள்ளனர்.
சிலர் எடுத்த உடனே தங்களுக்கு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்து அந்த வேலைக்கு சென்று அங்கே தங்களுடைய திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் தங்களுக்கும் முக்கியத்துவம் இல்லாததை உணர்ந்ததாக கூறியுள்ளனர். பின்னர் சிறு நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து தற்போது பெரிய அளவில் உயர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications