காய்கறி விற்ற 29 வயது இளைஞன், இன்று CEO..கனவை நிஜமாக்கிய Rodbez!

அனைவருக்கும் ஒரு சொந்த தொழில் தொடங்கி அதனை பெரிய நிறுவனமாக்கி விடவேண்டும் என்ற கனவு பலித்ததில்லை. அதற்கு அவர்கள் வாழக்கையில் சந்திக்கும் பல நிகழ்வுகள் காரணமாக இருக்கும். ஆனால் அதே அளவு கஷ்டம் இருந்தாலும், ஒரு சிலர் அவர்கள் எதிர்பாராத வேளையில், அவர்களின் கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் அவர்களின் தொழில்முனைவோர் கனவை அடைந்து வெற்றி பெற்று வருகின்றனர்.

அப்படிப்பட்ட நபர்களில் ஒருவரான ஸ்டார்ட்-அப் கிங் என்று அழைக்கப்படும் தில்குஷ் குமார் என்பவரைப் பற்றிதான் இங்கு நாம் பார்க்கப் போகிறோம். அவர் வாழக்கையில் கடந்த வந்த பாதை, என்னென்ன முயற்சிகள் மூலம் அவர் லட்சத்தியத்தை அடைந்தார் என இனி பார்க்கலாம். காய்கறி விற்ற 29 வயது இளைஞன் இன்று எப்படி சிஇஓ ஆக உயர்ந்துள்ளார்.

 காய்கறி விற்ற 29 வயது இளைஞன், இன்று CEO..கனவை நிஜமாக்கிய Rodbez!

யார் இந்த தில்குஷ் குமார்? : 29 வயதான தில்குஷ் குமார் பாட்னாவில் ஒரு காய்கறி கடை நடத்தி வந்துள்ளார். இவர் அதற்கு முன் ஏழு ஆண்டுகளாக டெல்லியில் ரிக்‌ஷா இழுக்கும் பணியையும் செய்து வந்துள்ளார். இன்று, கிராமம் மற்றும் நகர்ப்புறங்களை இணைக்கும் ஆப்-அடிப்படையிலான தொடக்க நிறுவனமான RodBez-ஐ உருவாக்கியவர் மற்றும் அதன் CEO ஆகவும் உள்ளார்.

அதென்ன Rodbez : கேரளா முதல் காஷ்மீர் வரை இந்தியா முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து இணைப்புகளை ஏற்படுத்துவதே RodBez க்கான நோக்கம் என குமார் கூறியுள்ளார். குமார் அவரின் மொத்த சொத்துக்களையும் இந்த ஸ்டார்ட்அப்பை நம்பி ஒப்படைத்துள்ளார்.

 காய்கறி விற்ற 29 வயது இளைஞன், இன்று CEO..கனவை நிஜமாக்கிய Rodbez!

Uber Ola விற்கு நிகரான சேவை : கடந்த 7 ஆண்டுகளில் குமார் உருவாக்கிய RodBez இரண்டாவது ஸ்டார்ட்அப் நிறுவனமாகும், முயற்சித்து வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவர் Uber மற்றும் Ola போன்ற ஆன்லைன் போக்குவரத்து துறையில் இருக்கும் பெரும் தலைகளின் உத்திகளைப் பயன்படுத்தி கிராமப்புறங்களை இணைக்கு ஒரு தனித்துவமான ஐடியாவை இதில் சேர்த்துள்ளார்.

RodBez முக்கிய சேவை : RodBez வாயிலாக one-way taxi, taxi pool, and carpool டாக்சி சேவைகளை நீண்ட தூரத்திற்கு செல்ல உதவும். ஆனால் மக்கள் அதற்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

 காய்கறி விற்ற 29 வயது இளைஞன், இன்று CEO..கனவை நிஜமாக்கிய Rodbez!

ஸ்டார்ட்-அப் : சிறிய நகரங்களுக்காக வடிவமைக்கப்பட்ட Uber போன்ற சேவையில், இவர் கிராமப்புறங்களையும் இணைத்து இந்தியாவின் வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பில் ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளார். அதுமட்டுமின்றி இவரின் வெற்றிக் கதை இந்தியாவில் ஸ்டார்ட் -அப் அமைப்புகளுக்கும் ஒரு நல்ல உதாரணமாக இருக்கும் என நம்பலாம்.

இந்தியா மூன்றாவது இடம் : அமெரிக்கா மற்றும் UK விற்கு அடுத்தபடியாக, மிகப்பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட நாடுகளின் உலகளாவிய பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அதன்படி இந்தியாவில் ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டில் மட்டும் 1300 அதிகரித்துள்ளது. அதேபோல தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை 9300ஐ எட்டியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+