இதெல்லாம் பெங்களூரில் மட்டும் தான் நடக்கும்.. இந்தியாவின் சிலிக்கான் வேலினு சும்மாவா பேர் வச்சாங்க!!

பெங்களூரு: இந்தியாவின் சிலிக்கான் வேலி, தொழில்நுட்ப நகரம், ஸ்டார்ட் அப் தலைநகரம் என பெங்களூருக்கு பல்வேறு சிறப்பு பெயர்கள் இருக்கின்றன. அது அனைத்து வகையிலும் பொருத்தமானது தான் என்பதை நிரூபிக்கும் வகையிலான சம்பவங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகின்றன.

அண்மையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தன்னுடைய ஸ்மார்ட் வாட்சில் கியூஆர் கோடினை வைத்திருக்கும் புகைப்படம் மற்றும் ஓட்டுநர் இருக்கையில் அலுவலக இருக்கையை பொருத்தி சௌகரியமாக ஆட்டோ ஓட்டும் ஓட்டுநர் என பல்வேறு செய்திகள் இணையதளத்தில் வலம் வந்தன.

இதெல்லாம் பெங்களூரில் மட்டும் தான் நடக்கும்.. இந்தியாவின் சிலிக்கான் வேலினு சும்மாவா பேர் வச்சாங்க!!

அந்த வகையில் பெங்களூருவில் முன்னோடியாக ஒரு ஹோட்டலில் வரவேற்பு அறையில் வேலை செய்பவர் விர்ச்சுவல் முறையில் பணியாற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. டெல்லியை சேர்ந்த Entourage என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அனன்யா நாரங். இவர் பெங்களூருவில் ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார்.

அந்த ஹோட்டலுக்கு வந்தவுடன் அங்கே பணியில் இரண்டு பாதுகாவலர்கள் மட்டுமே இருந்தனர். வரவேற்பு மேஜைக்கு சென்று பார்த்தபோது அங்கே ஆட்கள் யாரும் இல்லை அப்போதுதான் தெரிந்தது இந்த ஹோட்டலில் அனைத்தையுமே வீடியோ கான்ஃபரன்ஸ் முறையிலேயே செயல்படுத்துகின்றனர்.

அனைவரையும் வரவேற்பது, அவர்களுக்கான அறைகளை ஒதுக்கீடு செய்வது, செக் அவுட், உணவு உள்ளிட்ட பிற சேவைகளை செய்து தருவது என அனைத்தையுமே இந்த ஹோட்டல் ஊழியர்கள் வீடியோ கான்ஃபரன்ஸ் முறையிலேயே செய்து தருகிறார்கள். இவர்கள் அனைவரும் இந்த ஹோட்டலின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் பணிபுரிகிறார்கள் என அவர் கூறியுள்ளார்.

இந்த ஹோட்டலில் டிஜிட்டல் முறையில் அனைத்தையும் கையாளுகின்றனர் என தெரிவித்துள்ளார். இது தான் பெங்களூரு, இந்தியாவின் சிலிக்கான் வேலி என்பது சரியாக தான் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

அவரது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் உடனடியாக கவனத்தை ஈர்த்துவிட்டது. இந்த தொழில்நுட்ப மேம்பாட்டினை பலரும் வரவேற்றுள்ளனர். ஆனால் சிலர் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டாலும் நேரடியாக மனிதர்களுடன் மனிதர்கள் உரையாற்றுவதில் கிடைக்கும் அனுபவம் இதில் கிடைக்காது என தெரிவித்துள்ளனர். ஒரு ஒரு பயனர் இதுதான் எதிர்காலமாக இருக்கப் போகிறது என தெரிவித்துள்ளார்.

இருந்தாலும் மனிதர்கள் மனிதர்களுடன் நேரடியாக உரையாடி வரவேற்பு தானே நமது பண்பாடு என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு பயனர் இன்னும் சில ஆண்டுகளில் இவை அனைத்தையும் ரோபோக்களை கொண்டே செய்ய போகிறோம் அப்போது மனிதர்களுக்கான வேலை பறி போய்விடும் என கூறியுள்ளார்.

Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+