ஆதார் எண் –ரேஷன் கார்டை இணைத்து விட்டீர்களா? இல்லையெனில் இதோ மீண்டும் ஒரு வாய்ப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இதுவரை உங்கள் ரேஷன் கார்டினை இன்னும் ஆதார் எண் உடன் இணைக்கவில்லையா? இதோ உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு மற்றும் ஆதாரினை இணைக்கும் பணி தற்போது செம்டம்பர் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக உங்களது ரேஷன் கார்டு செயலிழக்காது எனவும், கொரோனா முழு அடைப்பு காலத்திலும் தங்கள் குடும்ப அட்டைகளை பயன்படுத்தி, மக்கள் உணவு தானியங்களை தொடர்ந்து பெறலாம் எனவும் மத்திய நுகர்வோர் அமைச்சகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு ரத்து இல்லை

ரேஷன் கார்டு ரத்து இல்லை

பொது விநியோக முறை (PDS)-ன் கீழ் பயனாளிகளின் ரேஷன் கார்டுகள் எதுவும் ரத்து செய்யப்படமாட்டாது. அதோடு ஆதார் எண் இல்லை எனினும் பயனாளிகளின் பெயர் நீக்கப்படாது என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆதார் எண் இல்லாதவர்களின் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படும் என்று தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இப்படி ஒரு அறிவிப்பினை அரசு வெளியிட்டுள்ளது.

பெயர் நீக்கம் கூடாது

பெயர் நீக்கம் கூடாது

மேலும் இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அமைச்சகம் தெளிவான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது, அதில் எந்தவொரு உண்மையான பயனாளிக்கும் உணவு தானியங்களின் ஒதுக்கீட்டில் இருந்து மறுப்பு தெரிவிக்க கூடாது. அதோடு ஆதார் எண் இல்லை என்ற காரணத்தால் மட்டுமே அவர்களின் பெயர்கள் / குடும்ப அட்டைகளில் இருந்து நீக்கப்படக்கூடாது / ரத்து செய்யப்படக்கூடாது என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அறிவுறுத்தல்கள்

அறிவுறுத்தல்கள்

மேலும், பயனாளியின் ஆதார் அங்கீகாரத்தில் தோல்வி, பயனாளியின் மோசமான பயோமெட்ரிக்ஸ், நெட்வொர்க் / இணைப்பு / இணைப்பதில் உள்ள சிக்கல்கள் அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்ப காரணங்களால் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் மறுக்கப்படாது என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

மானிய விலையில் அரிசி

மானிய விலையில் அரிசி

NFSA-ன் கீழ், மத்திய அரசு ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியங்களை சுமார் 80 கோடி மக்களுக்கு உயர் மானிய விலையில் வழங்குகிறது. முழு அடைப்பின் போது நிவாரணம் வழங்க, மத்திய அரசு ஒரு மாதத்திற்கு கூடுதலாக 5 கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்குகிறது. இது ஜூன் வரை மூன்று மாத காலத்திற்கு நீடிக்கும் எனவும் அறிவித்துள்ளது.

ஆதார் – ரேஷன் இணைப்பு

ஆதார் – ரேஷன் இணைப்பு

தற்போது உள்ள 23.5 கோடி குடும்ப அட்டைகளில் கிட்டத்தட்ட 90% ஏற்கனவே ரேஷன் ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. (அதாவது குடும்பத்தில் ஒரு உறுப்பினராவது). 80 கோடி பயனாளிகளில் கிட்டத்தட்ட 85% பேர் அந்தந்த ரேஷன் கார்டுகளுடன் தங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்துள்ளனர்.

இணைப்பு அவசியம்

இணைப்பு அவசியம்

இந்த நிலையில் ஏழை மற்றும் புலம்பெயர்ந்த பயனாளிகளின் நலனைப் பாதுகாப்பதற்காக ஒரே நாடு ஒரு ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் NFSA ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களின் மாநிலங்களுக்கிடையேயான பெயர்வுத்திறனை செயல்படுத்தவும் அரசாங்கம் தொடங்கியுள்ளது. ஆகையால், நாட்டில் ஒவ்வொரு ரேஷன் கார்டு வைத்திருப்பவர் மற்றும் பயனாளியின் தனித்துவமான பதிவை நிறுவுவதில் ஆதார் எண்களை இணைப்பது முக்கியமானது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆகையால் அவரது உரிமை பாதுகாக்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Aadhaar card, ration card linking deadline extended till end of this September

Government clarified that ration cards not linked to aadhaar cards will not be cancelled
Story first published: Tuesday, May 12, 2020, 19:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X