சென்னை: புதிதாக ஒரு பிரச்சனை பான் மற்றும் ஆதார் கார்டு இணைத்தவர்களுக்கு வந்துள்ளது. இதனால் அவர்கள், பல வங்கி சார்ந்த சேவைகள் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. அது என்னவென்றால், தென்னிந்தியாவில் வசிக்கும் பலர், தங்களது பெயர் ஆதார் கார்டிலும் பான் கார்டிலும் வேறு வேறாக இருப்பதால் பெரிய பிரச்னையை சந்திக்க தொடங்கியுள்ளனர்.
ஆதார் கார்டும் பான் கார்டும் பேங்க் பரிவர்த்தனைகளில் தேவைப்படும் முக்கிய ஆவணங்களாக இருப்பதால், இது போன்ற அனைத்து அரசாங்க ஆவணங்களிலும் உங்களது பெயர், முகவரி, தொலைதொடர்பு விவரங்கள் அனைத்தும் ஒரே மாதிரியானதாக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது அவசியம். ஏதேனும் ஒரு அரசாங்க ஆவணத்தில் உங்களது விவரங்கள் மாற்றாக இருந்தாலும் அது உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தக் கூடும்.

மத்திய அரசு ஏற்கனவே ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இதனை பொருட்படுத்தாத சுமார் 11.48 கோடி மக்களின் பான் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக அவர்களிடம் இருந்து 600 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் வசூலித்துள்ளது.
வருமானவரித்துறையினரால் வழங்கப்படும் பான் கார்டு, அனைத்து வங்கி பரிவர்த்தனைகளுக்கும் அத்தியாவசியமான ஒன்றாகும். பான் எண் என்று சொல்லப்படுகிற பத்து இலக்க எண்ணானது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். மேலும், வரி செலுத்துகிற அனைவருக்கும் பான் கார்டு அவசியமான ஒன்றாகும். ஆதார் அட்டையினை பான் கார்டுடன் இணைக்க மத்திய அரசு நிறைய கால அவகாசங்களை தந்தது. முதலில் பான் - ஆதார் கார்டு இணைக்காதவர்களுக்கு ஒரு வருடம் அவகாசம் தரப்பட்டது. அதன் பின் 6 மாத கூடுதல் கால அவகாசத்தை மத்திய அரசு வழங்கியது. அதற்கு பின்னும் ஆதார் - பான், இணைக்காத நபர்களுக்கு 500 ரூபாய் அபராதத்துடன் இணைப்பை செய்யுமாறு மத்திய அரசு வலியுறுத்தியது. அதன் பின்னர் 1000 ரூபாய் அபராதமாக மத்திய அரசு மாற்றியது.
தற்போது மக்கள் சிலர் தங்களது ஆதார் கார்டிலும் பான் கார்டிலும் ஒரே மாதிரியான பெயர் இல்லை என்று சில பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். இதற்கான காரணம், தென்னிந்தியாவில் வசிக்கும் பலர் தங்களின் இனிஷியலை பயன்படுத்துகின்றனர். ஆனால் பான் கார்டு குடும்பப்பெயரை கட்டாயம் ஆக்குகிறது. இதனால் அவர்களின் மற்ற கார்டுகளில், குறிப்பாக ஆதார் கார்டில் இனிஷியலும் பான் கார்டுகளில் அவை இல்லாமல் போகும்போது, அவர்கள் சிக்கலை சந்திக்க நேரிடுகிறது.
இவ்வாறு பெயர் பல்வேறு ஆவணங்களில் ஒரே மாதிரியாக இல்லாத பட்சத்தில் வருமான வரி தாக்கல் செய்வது மற்றும் வங்கியில் பரிவர்த்தனை அல்லது லோன் எடுப்பது போன்ற செயல்களைச் செய்யும் போது இது பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். இந்தியாவில் மட்டும் 57.25 கோடி மக்கள் தங்களுடைய ஆதார் பான் கார்டு ஆகியவற்றை இணைத்துள்ளனர். இதில் 70.24 கோடி பேர், பான் கார்டு வைத்துள்ளனர். இதில் 11.48 கோடி முடக்கப்பட்ட பான் கார்டுகள், மத்திய அரசின் கால அவகாசத்தையும் மீறி இணைக்கப்படாதவை. அதாவது இணைக்காதவர்களின் பான் கார்டு டீ ஆக்டிவேட் செய்யப்படும். மேலும், இதனால் வங்கி சார்ந்த விஷயங்கள் பாதிக்கப்படுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications