கோடைக்காலம் என்றால் பலரும் விரும்பி சாப்பிடும் பால் பொருளில் ஒன்று ஐஸ்கிரீம். குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்து குளிர்ச்சியாக வழங்குவதால் ஐஸ்கிரீமை மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த ஆண்டு கோடைக்காலத்தில் வழக்கத்தை விட அதிகமான ஐஸ்கிரீம் விற்பனையாகி வருகிறது என தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆவின் பால் பொருட்கள்
ஆவின் நிறுவனம் பால் மட்டுமல்லாமல் நெய், தயிர், ஐஸ்கிரீம், இனிப்பு வகைகளையும் உற்பத்தி செய்து தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்துவருகிறது.
கோடைக்காலம்
இப்போது கோடைக்காலம் என்பதால் ஆவின் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வழக்கத்தை விட அதிகமாக 1.5 லட்சம் பீஸ் ஐஸ்கிரீம் விற்பனை செய்து வருவதாகும், அதில் 1 லட்சம் ஐஸ்கிரீம் வரை மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனையாகுவதாகவும் தெரிவித்துள்ளது.
ஐஸ்கிரீம் உற்பத்தி
ஆவின் ஐஸ்கிரீம் திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, மதுரை, விழுப்புரம் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைந்துள்ள ஆலைகளில் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆலைகளில் ஒரு ஷிப்டிற்கு 40 ஆயிரம் வரை ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்படுகிறது. தேவை அதிகரித்தால் இன்னும் கூட உற்பத்தியை அதிகரிக்க முடியும் என கூறப்படுகிறது.
குல்பி ஐஸ்
ஆவின் ஐஸ்கிரீமில் அதிகமாக மக்கள் குல்பி ஐஸ் தான் விரும்பி சாப்பிடுகின்றனர். தினமும் 10 ஆயிரம் முதல் 15,000 குல்பி ஐஸ் விற்பனையாகிறது. மழைக்காலங்களில் கூட 7000 குல்பி ஐஸ் விற்பனையாகிறது. குல்பி தான் தங்களது பிரதான ஐஸ்கிரீம் தயாரிப்பு என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிற ஐஸ்கிரீம் வகைகள்
குல்பி ஐஸ்கிரீமிற்கு அடுத்தபடியாக 10 ரூபாய் மதிப்பிலான வெண்ணிலா, ஸ்ட்ராபெர்ரி, மாம்பழம் சுவை கப் ஐஸ்கிரீம் மற்றும் சாக்கோ பார் ஆவின் ஐஸ்கிரீம் பொருட்களை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.
பால் உற்பத்தி
ஆவின் நிறுவனம் தங்களது கூட்டுறவுச் சங்கங்கள் மூலம், தினமும் 34.5 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்கிறது. அதில் 3.5 லட்சம் லிட்டர் பாலை அந்தந்த கூட்டுறவுச் சங்கங்களிலேயே நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்றுவிடுகிறது. 28.5 லட்சம் லிட்டர் பாலை பாக்கெட்டுகளில் நிரப்பி தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்கிறது.
பால் விலை குறைப்பு
திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பால் விலை குறைக்கப்பட்டது. அதனால் தினமும் 1.5 லட்சம் லிட்டர் வரை கூடுதலாகப் பால் விற்பனை செய்யப்படுவதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆவின் பால் 500 மிலி விலை 18 ரூபாய்க்கும், 1 லிட்டர் 37 ரூபாய்க்கும் கிடைக்கிறது.
அடுத்தகட்ட திட்டம்
தமிழ்நாட்டில் மே மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் பால் உற்பத்தி அதிகமாக இருக்கும். இந்த கால கட்டத்தில் கிடைக்கும் உபரி பாலை மோர் மற்றும் பால் பவுடர்களாக மாற்றி விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் கூறுகிறது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications