சென்னை: இந்தியாவில் முன் எப்போதும் இல்லாததை விட தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் ஏசி விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக டெல்லி உள்ளிட்ட நகரங்களில் வரலாற்றில் இல்லாத அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. அனல் காற்று வீசுவதால் ஏசி இல்லாமல் வீட்டிற்குள் கூட இருக்க முடியாது என்ற ஒரு சூழல் இந்தியாவில் தற்போது உருவாகியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் ஏசி-க்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது.

என்டிடிவி ப்ராஃபிட் (ndtvprofit) வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், மே மாதத்தில் இந்தியாவில் ஏசி விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. டெல்லி உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல நாட்களுக்கு வெப்ப அலை வீசியதோடு 45 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவானது.
இதனால் குறைந்த வருமானம் இருந்தாலும் கூட ஏசி வாங்க வேண்டிய சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். நடப்பு ஆண்டில் மே மாதத்தில் தான் அதிக எண்ணிக்கையில் ஏசி விற்பனையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வோல்டாஸ், எல்ஜி, பேனசோனிக், டைகின், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட நிறுவனங்களின் ஏசி விற்பனை மே மாதத்தில் கணிசமான அளவு உயர்ந்துள்ளன. வோல்டாஸ் நிறுவனத்தின் ஏசி விற்பனை மே மாதத்தில் இரண்டு அதிகரித்துள்ளது. ஜூன் மாதம் வரை இந்த டிமாண்ட் காணப்படும் என வோல்டாஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனரான பிரதீப் பக்சி தெரிவித்துள்ளார். கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 100% விற்பனை உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதே போல எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் இந்தியாவில் தங்களது நிறுவனங்களின் ஏசி விற்பனை என்பது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவு நடப்பு ஆண்டில் கூடுதலாக பல மடங்கு உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது.
குறிப்பாக தென் மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களில் தங்களது விற்பனை 100% வளர்ச்சி அடைந்துள்ளதாக எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரான சஞ்சய் சித்தாரா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வருவதால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஏசி-க்கான டிமாண்ட் இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.
ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் மேலாண் இயக்குனரான தியாகராஜன் நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை ஏசி விற்பனை என்பது இந்தியாவில் 40% வரை உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் ஏசி தேவை உச்சகட்டத்தை எட்டியதாகவும் அவர் கூறியுள்ளார் .ஒட்டுமொத்தமாக காணும் போது ஏசி, கூலர் உள்ளிட்டவற்றின் விற்பனை 70% வரை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் தியாகராஜனை பொறுத்தவரை 2024 ஆம் ஆண்டு தங்கள் போன்ற ஏசி விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு ஒரு பொற்காலம் எனக் கூறியுள்ளார். டைகன் நிறுவனத்தின் மேலாண் இயக்குனரான கண்ஃபாலிஜித் ஜாவா, கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 70% விற்பனை அதிகரித்தது என்றும் இதன் காரணமாக 2025 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் தங்கள் நிறுவனத்தின் வருவாய் 40% உயர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
பேனசோனிக் நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவராக இருக்கக்கூடிய அபிஷேக் வர்மா மே மாதம் இதுவரை இல்லாத அளவு தங்கள் நிறுவனத்தில் 52% கூடுதலாக ஏசி விற்பனையானது என்று தெரிவித்துள்ளார்.
ஒட்டு மொத்தமாக இந்தியா முழுவதுமே ஏசி விற்பனை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப மின்சார தேவையும் உயர்ந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications