7 மாத சம்பளத்துடன் பணிநீக்கம்.. சோகத்திலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி..!

உலகின் முன்னணி ஐடி கன்சல்டிங் மற்றும் ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் அக்சென்சர் பல்வேறு காரணங்களுக்காகக் கொரோனா காலத்தில் தனது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்தது. அக்சென்சர் நிறுவனத்தின் இந்தப் பணிநீக்கம் அறிவிப்பு இந்நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல் சக ஐடி நிறுவன ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் பயத்தில் இருக்கும் அக்சென்சர் நிறுவன ஊழியர்களுக்கு, அந்நிறுவனம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், நிறுவனத்தை விட்டு வெளியேறுவோருக்கு அக்சென்சர் நிர்வாகம் சுமார் 7 மாத சம்பளத்தை severance payout ஆகக் கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

பொதுவாக நிறுவனங்கள் பணிநீக்கம் செய்யும் போது, 1 அல்லது 2 மாதம் அதிகப்படியாக 3 மாதம், இல்லையெனில் நிறுவனத்தில் பணியாற்றிய வருடத்திற்கு இணையான மாத சம்பளத்தை severance payout ஆகக் கொடுக்கும். ஆனால் தற்போது 7 மாத severance payout அறிவித்துள்ளது.

ராஜினாமா

ராஜினாமா

அக்சென்சர் தற்போது அறிவித்துள்ள 7 மாத severance payout (பணி நீக்குச் சம்பளம்) என்பது இந்நிறுவன பணியில் இருந்து தானாக முன்வந்து பணியை ராஜினாமா செய்து வெளியேறுபவர்களுக்கு மட்டுமே என்றும் அக்சென்சர் தெரிவித்துள்ளது.

இந்த 7 மாத severance payout சம்பளத்தில், 3 மாத நோட்டீஸ் பீரியடும் அடக்கம் என்பதால், கூடுதலாக 4 மாத சம்பளத்தை நிறுவனத்தை விட்டு வெளியேறுவோருக்கு அக்சென்சர் கொடுக்கிறது.

 

5 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம்

5 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம்

அக்சென்சர் நிறுவனம் கடந்த மாதம் செலவுகளைக் குறைக்கத் திட்டமிட்ட போது உலக நாடுகளில் இருக்கும் தனது ஊழியர்களில் 5 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பை அடுத்த தற்போது தானாக முன்வந்து வெளியேறும் ஊழியர்களுக்கு 7 மாத பணி நீக்குச் சம்பளம் கொடுப்பதாக அறிவித்துள்ளது.

இந்தியா

இந்தியா

உலகில் பல நாடுகளில் வர்த்தகம் செய்யும் அக்சென்சர் சுமார் 5 லட்ச ஊழியர்களைப் பணியில் அமர்த்தி வர்த்தகம் செய்து வருகிறது. இதில் இந்தியாவில் மட்டும் 2 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

இந்திய வர்த்தகத்தில் 5 சதவீதம் என்றால் குறைந்தபட்சம் 10,000 ஊழியர்கள் இந்தியாவில் பணிநீக்கம் செய்யப்படலாம்.

 

வேலைத் திறன்

வேலைத் திறன்

இந்த வருடம் அனைத்து வர்த்தகப் பகுதிகளில் இருந்தும் 5 சதவீத ஊழியர்களை அவர்களது வேலைத் திறன் அடிப்படையில் தேர்வு செய்து பணிநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது அனைத்து மட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அக்சென்சர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+