இந்திய ஐடி துறை ஊழியர்கள் ஏற்கனவே சம்பள உயர்வு கிடைக்காமலும், குறைவான வேரியபிள் பே தொகை உடனும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நெட்ஆப் நிறுவனர் சிஇஓ ஜார்ஜ் குரியன் ஐடி துறையில் மையில்டு ரெசிஷன் வரும் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் ஆக்சென்சர் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
ஐடி சேவை நிறுவனமான அக்சென்சர் வியாழக்கிழமை முழு ஆண்டு வருவாய் மற்றும் முதல் காலாண்டு வருவாயின் வால் ஸ்ட்ரீட் இலக்குகளை விட குறைவாக இருக்கும் என கணித்துள்ளது. அதிகப்படியான பணவீக்கம் மற்றும் வட்டி விகித அழுத்தங்கள் ஆகியவை அடுத்த ஆண்டு வரையில் ஐடி சேவைக்கான டிமாண்ட் அளவில் பாதிப்பு ஏற்படும் எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது இந்திய ஐடி துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ்-ஐ காட்டிலும் அதிகப்படியான வருமானம் ஈட்டும் அக்சென்சர் நிறுவனத்தின் போக்கு தான் பிற முன்னணி ஐடி சேவை நிறுவனத்திலும் இருக்கும்.
அக்சென்சர் நிறுவனத்தின் நான்காவது காலாண்டு வருவாயும் இலக்குகளை அடைய தவறவிட்ட நிலையில், இந்நிறுவன பங்குகள் வியாழக்கிழமை வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 5% சரிந்தது. இதன் தாக்கம் இந்திய சந்தையிலும், அதன் காலாண்டு முடிவுகளிலும் எதிரொலிக்க உள்ளது. அக்டோபர் 12 ஆம் தேதி இன்போசிஸ் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதங்களை எதிர்பார்த்ததை விட நீண்ட காலத்திற்கு உயர்வாகவே வைத்திருக்க முடிவு செய்துள்ளது. இதேபோல் இந்த வருடம் இறுதிக்குள் கச்சா எண்ணெய் விலை உயர்வை சமாளிக்க மீண்டும் ஒரு முறை வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இது அனைத்தும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்வாகவே இருக்கும் என்பதால் நிறுவனங்கள் தங்களுடைய செலவுகளை ஆரோக்கியமான நிலைக்குத் திரும்புவதற்கு கூடுதல் காலம் எடுக்கும், மேலும் செலவுகளை குறைக்க புதிய முயற்சிகள் எடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் ஐடி மற்றும் டெக் சேவைகளை பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
இந்திய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் ஜூலை மாதத்தில் அதன் முழு ஆண்டு வருவாய் கணிப்புகளை பாதியாகக் குறைத்தது, அதே நேரத்தில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் கணிசமாக பாதிப்பு ஏற்படும் என்பதை ஏற்கனவே தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அக்சென்சர் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் earnings per share பிரிவில் 12.45 டாலர் பெறும் என கணிக்கப்பட்ட நிலையில், இந்நிறுவனம் 11.97 முதல் 12.32 டாலராக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் வருவாய் வளர்ச்சி அளவீடு 2- 5 சதவீதத்திற்கு மத்தியில் இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது, இதுவும் சந்தை கணிப்புக்கு குறைவான அளவீடு.
More From GoodReturns

லட்சக்கணக்குல சம்பளம் குடுக்கிறாங்கனு இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க!! ஐடி ஊழியர்கள் தலையில் தொங்கும் கத்தி!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications