நடப்பு ஆண்டில் இந்தியாவின் மொபைல் ஏற்றுமதியில் இதுவரையில் 40% ஐபோன்கள். பிஎல்ஐ திட்டத்திற்கு மிக நன்றிகள். ஏப்ரல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் பி எல் ஐ திட்டத்தின் மூலம் ஏற்றுமதியானது 50,000 கோடி ரூபாயினை தாண்டியுள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 110% அதிமாகும். இந்த விகிதமானது இனி வரவிருக்கும் ஆண்டுகளில் இனியும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் உற்பத்தியாளர்கள்
இதில் முக்கிய பங்களித்தவர்கள் ஃபாக்ஸ்கான், பெகட்ரான் & விஸ்ட்ரான் & சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும், இந்தியாவில் சுமார் 40% ஸ்மார்ட்போன் ஏற்றுமதியானது ஐபோன் தான் என, ஜி20 அமைப்பின் இந்திய குழுவின் தலைவரும், முன்னாள் நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரியுமான அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
பி எல் ஐ திட்டம்
இதில் அரசின் ஆத்ம நிர்பார், மற்றும் பி எல் ஐ (PLI) திட்டங்களீன் பங்கு முகிய பங்காகும். இந்த திட்டங்களின் மூலம் 14 துறை சார்ந்த இந்திய உற்பத்தி திட்டத்தினை அறிமுகம் செய்தது. இதன் மூலம் நாட்டின் உற்பத்தியினை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டு மத்திய அரசு தொடங்கியது. இதன் மூலம் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சார்பு இந்தியா திட்டம்
இதன் மூலம் இந்தியா தனது மேக் இன் இந்தியா பொருட்களை அதிகரிக்கும். இதனை உலகம் முழுக்க விரிவாக்கம் செய்யும். இது முதலீடுகளை அதிகரிக்க உதவும். சர்வதேச சந்தையில் இந்திய பொருட்களை விரிவுபடுத்தும். இது ஏற்றுமதியினை அதிகரிகும். எல்லாவற்றுக்கும் மேலாக தற்சார்பு இந்தியா திட்டத்தினை வலுப்படுத்தும். இது மற்ற நாடுகளை இந்தியா சார்ந்திருப்பதை குறைக்கும்.
சில தினங்களுக்கு முன்பு சலுகை
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட அரசு சில நிறுவனங்களுக்கு ஊக்க சலுகைகளுக்கு அரசு ஒப்புதல் அளித்தது. பாக்ஸ்கான் இந்தியா மற்றும் பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கும் அரசு, 357.17 கோடி ரூபாய் மற்றும் 58.29 கோடி ரூபாய் ஊக்கத்தொகைக்கு ஒப்புதல் அளித்தது.
ஆப்பிள்
ஏற்கனவே சீனாவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் சீனாவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள், சீனாவுக்கு வெளியே தங்களது உற்பத்தியினை திட்டமிட்டு வருகின்றன. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே சென்னையில் தனது உற்பத்தியினை ஆரம்பித்துவிட்டது. ஆப்பிள் போனுக்கான உதிரி பாகங்கள் சப்ளைக்காக ஓசூரில் ஆலை அமையவுள்ளது. இது மேற்கொண்டு இந்தியாவில் எதிர்காலத்தில் ஆப்பிளின் வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம். இது சீனாவினை சார்ந்திருப்பதை குறைக்க வழிவகுக்கலாம்.
உற்பத்தி அதிகரிக்கலாம்
எல்லாவற்றுக்கும் மேலாக சீனா அமெரிக்க இடையேயான பதற்றம், அங்கு அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் என பலவும் இந்தியாவுக்கு வாய்ப்பாக அமையலாம் என்றும் கூறுகின்றனர். இதற்கிடையில் இந்திய அரசின் பி எல் ஐ திட்டமானது நிச்சயம் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கலாம். இது மேற்கொண்டு இங்கு உற்பத்தியினை அதிகரிக்க தூண்டலாம்.
பொருளாதார இலக்கு
இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலும் சாதகமான தாக்கத்தினை ஏற்படுத்தலாம் எனலாம். மொத்தத்தில் அரசின் பொருளாதார இலக்கினை எட்ட இது சரியான வாய்ப்பாக அமையலாம்.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications