இந்தியாவில் அனைவருக்கும் வங்கி கணக்கும், நிதி சேவைகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ஜன் தன் யோஜனா முதல் பல முயற்சிகளை எடுத்து வரும் வேளையில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வங்கி கணக்கு திறக்க முடியாமல் அவதிப்படும் வேளையில், அவரின் பிரச்சனையை இந்திய மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக பாலிவுட் கிங் ஷாருக் கான்-ஐ டேக் செய்து சமுக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
பிரக்யா பிரசூன் சிங்- ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் இவர், ஆசிட் வீச்சில் உயிர் பிழைத்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை வெளிப்படுத்தும் வகையில் டிவிட்டரில் பிரக்யா செய்த பதிவு பெரும் தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

பிரக்யா பிரசூன் சிங் போன்ற ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்கள் வாழ்வில் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல பல உதவிகள் கொடுக்கப்பட்டாலும், நடைமுறையில் அவர்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு பிரச்சனையை தான் பிரக்யா பிரசூன் சிங் தற்போது வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
பிரக்யா பிரசூன் சிங்-ன் ஆசிட் வீச்சில் முகம் சிதைந்துள்ள நிலையில் அவருக்கு வங்கிக் கணக்கை திறக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. வங்கி கணக்கு திறக்கும் போது KYC செயல்முறை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கட்டாயம். அப்படியிருக்கையில் KYC செயல் முறையின் போது பிரக்யாவின் கண் சிமிட்ட முடியாததால் பயோமெட்ரிக் ஸ்கேனிங் செய்ய முடியாமல் போனது.
இதனால் அவர் வங்கி கணக்கை திறக்க முடியாமலும், அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை வங்கிச் சேவைகள் அவருக்கு கிடைக்காமலும் போய்விட்டது. இந்த சம்பவத்தை டிவிட்டரில் பிரக்யா பிரசூன் சிங் அனைத்து தரப்பு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக பதிவிட்டது மட்டும் அல்லாமல் பாலிவுட் கிங் ஷாருக் கான் மற்றும் மீர் அறக்கட்டளையை டேக் செய்துள்ளார்.

மீர் அறக்கட்டளை என்பது ஷாருக் கான் நடத்தும் ஒரு தொண்டு நிறுவனமாகும், இது ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பியவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான அறுவை சிகிச்சைகளுக்கு நிதியளிக்கிறது. ஷாருக் கான் மற்றும் மீர் அறக்கட்டளை டேக் செய்து இந்த உலகை ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள வாழ்வதற்கானதாகவும் மாற்றுங்கள் என தனது பதிவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதோடு பிரக்யா பிரசூன் சிங் தனது பிதிவில் ஐசிஐசிஐ வங்கி சிஇஓ சந்தீப் பக்ஷி டேக் செய்து வங்கியின் கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டு வந்து கண் சிமிட்ட முடியாமல் இருக்கும் என்னை போன்றவர்களுக்கும் வங்கி சேவைகள் பெறுவதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய கூறி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications