மும்பை: பல்வேறு துறைகளிலும் கால்பதித்து வெற்றிகரமாக தொழில் செய்து வரும் அதானி குழுமம் 2025ஆம் நிதியாண்டில் மெகா திட்டத்துடன் களமிறங்கியுள்ளது. 2025 ஆம் நிதியாண்டில் தொழில்களை விரிவுபடுத்த அதானி குழுமம் கிட்டத்தட்ட 80,000 கோடி ரூபாயை தயாராக வைத்துள்ளது.
2024 - 2025 ஆம் நிதியாண்டில் அதானி குழுமம் பெருமளவில் விமான நிலையம் சார்ந்த திட்ட பணிகளுக்காகவும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களிலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான மூலதனச் செலவினமாக 80,000 கோடி ரூபாயை தயாராக வைத்திருக்கிறது என அதானி குழுமத்தின் துணை நிதி அதிகாரியான சௌரப் ஷா தெரிவித்துள்ளார்.

"2025ஆம் நிதியாண்டில் எங்களது நிறுவனம் 80,000 கோடியை மூலதனச் செலவினமாக எடுத்து வைத்துள்ளது, இதில் பெரும் அளவிலான தொகை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்கும் விமான நிலையம் சார்ந்த தொழில்களுக்கும் செலவு செய்யப்பட இருக்கிறது" என கூறியுள்ளார்.
அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் அதானி குழுமம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் தனி கவனம் செலுத்தி வருகிறது. சூரிய மின் சக்தி திட்டங்கள், காற்றாலை திட்டங்களில் இந்தியாவின் பிரதான நிறுவனமாக உருவெடுப்பதே அதானி குழுமத்தின் இலக்கு. சோலார் பேனல்களை தயாரித்து அதன் மூலம் மின்சாரம் மற்றும் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்தத் திட்டத்திற்காகவும் விமான நிலையம் சார்ந்த தங்களது திட்டப் பணிகளுக்காகவும் 50,000 கோடி ரூபாயை தயாராக வைத்திருக்கிறது. இதனை அடுத்து சாலை பணிகள், குறிப்பாக கங்கா எக்ஸ்பிரஸ்வே பணிகளுக்காக 12,000 கோடி ரூபாயை செலவிட இருப்பதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள தொகை மற்ற தொழில்களுக்கு பிரித்து முதலீடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
அதானி நிறுவனம் விரைவில் பிவிசி துறையிலும் கால்பதிக்க உள்ளது. இதற்காக 10,000 கோடி ரூபாய் மூலதனச் செலவினமாக எடுத்து வைத்திருப்பதாக சௌரப் ஷா தெரிவித்துள்ளார். அதேபோல டேட்டா சென்டர் எனப்படும் தரவு மையத்திற்காக 5,000 கோடி ரூபாயை எடுத்து வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சோலார் மூலம் 10 மெகாவாட் மின் உற்பத்தியையும் காற்றாலைகள் மூலம் 3 மெகாவாட் மின் உற்பத்தி திறனையும் எட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதானி குழுமம் 2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் 45 கிகாவாட் மின் உற்பத்தி என்ற திறனை எட்டுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் நாடு முழுவதும் ஏழு விமான நிலையங்களை செயல்படுத்துவதற்கான குத்தகைகளை எடுத்துள்ளது.
நவிமும்பையில் இந்த நிறுவனம் கிரீன் பீல்ட் விமான நிலையத்தை கட்டமைத்து வருகிறது. இது 2025ஆம் நிதியாண்டில் செயல்பாட்டுக்கு வரும் என நம்பப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications