அதானி குழும நிறுவனங்கள் தொடர்ந்து ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையால் அதல பாதளம் எட்டிய நிலையில், தற்போது அதிலிருந்து மீளத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக அதானி குழுமத்தினை சேர்ந்த அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் 4 வர்த்தக அமர்வுகளில் மட்டும் மல்டிபேக்கர் வாய்ப்பினை கொடுத்துள்ளது எனலாம்
அதானி குழும பங்குகள் மோசமான சரிவினை எட்டிய நிலையில், இப்படி ஓரு வாய்ப்பினை கொடுத்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் இன்ப அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். இது உண்மையில் அதானி குழும முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
102% ஏற்றம்
அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 102% அதிகரித்து, 2049.60 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் 52 வார குறைந்தபட்ச விலை 1017.10 ரூபாயாகும். இது கடந்த பிப்ரவரி 3 அன்று எட்டியது. கடந்த அமர்வில் மட்டும் இப்பங்கின் விலையானது 14% அதிகரித்து, 1802.50 ரூபாயாக முடிவுற்றிருந்தது.
51% சரவில் பங்கு
எனினும் தற்போது வரையிலும் கூட இப்பங்கின் விலையானது அதன் 52 வார உச்சத்தில் இருந்து 51% கீழாகவே காணப்படுகின்றது. இதன் 52 வார உச்ச விலை 4189.55 ரூபாயாகும். இது கடந்த டிசம்பர் 2022ல் எட்டியது. இப்பங்கின் விலையானது ஒரு மாதத்தில் மட்டும் 46% சரிவினைக் கண்டுள்ளது.
ரூ.2.35 லட்சம் கோடி
அதானி குழுமத்தின் மீதான குற்றசாட்டுகளுக்கு மத்தியில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 1.16 லட்சம் கோடி ரூபாயாக சரிந்திருந்த நிலையில், தற்போது சற்றே அதிகரித்து சந்தை மதிப்பு 2.35 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு பிறகு 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலாக அதானி குழும, சரிவினைக் கண்ட நிலையில், தற்போது தான் மீளத் தொடங்கியுள்ளது.
ஹிண்டர்ன்பர்க் குற்றச்சாட்டு
ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கைக்கு பிறகு அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவினைக் கண்டன. குறிப்பாக அதானி எண்டர்பிரைசஸ் உள்பட மற்ற பங்குகளும் பெரும் வீழ்ச்சியினை கண்டன. பங்கு சந்தையில் தங்களது நிறுவனங்களின் மதிப்பினை உயர்த்தி காட்ட, அதானி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக ஹிண்டர்ன்பர்க் குற்றம் சாட்டியது. குறிப்பாக வரவு செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, மோசடியாக பண பரிவர்த்தனை என பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது.
தவறு தான்
ஆனால் அதானி குழுமமோ ஹிண்டர்ன்பர்க்கின் குற்றச்சாட்டானது தவறு. இதற்கு ஆதாரமில்லை. இது அதானி குழுமத்தின் மீது முதலீட்டாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையை தகர்க்கும் விதமாக வந்துள்ளது. எங்களின் சரிவில் ஹிண்டர்ன்பர்க் பலடைய பார்க்கிறது என்ற குற்றச்சாட்டியினையும் முன்வைத்தது.
அதானியின் முயற்சிகள்
எனினும் அதன் பிறகு முதலீட்டாளர்கள் இழந்த நம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக அதானி குழுமத்தின் உரிமை பங்கு வெளியீட்டினை ரத்து செய்து, 20,000 கோடி ரூபாய் முதலீட்டினை முதலீட்டாளார்களுக்கே திரும்ப கொடுத்தது. மேலும் கால அவகாசம் இருந்தும் கடனை முன் கூட்டியே செலுத்துதல், முழுக்கடனையும் செலுத்த திட்டமிடுதல் என முயற்சி செய்து வருகின்றது. இதற்கிடையில் அதானி குழும நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளும் சந்தைக்கு சாதகமாக வந்து கொண்டுள்ளன. ஆக இதன் காரணமாக அதானி குழும பங்குகள் மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளன.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications