இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் மாட்டிக்கொண்டு மெல்ல மெல்ல மீண்டு வரும் வேளையில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் பல வகையில் உதவி செய்து வந்தது.
இந்த நிலையில் தற்போது இலங்கை பொருளாதாரம், வர்த்தகம் மேம்பட இந்திய நிறுவனங்கள் உதவி செய்து வருகிறது. இந்தியாவின் பல முன்னணி நிறுவனங்கள் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், இலங்கையில் வேலைவாய்ப்பு, வர்த்தகம், பொருளாதாரத்தை உருவாக்கவும் முதலீடு செய்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை இலங்கை அரசு அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இந்திய தொழிலதிபர் மற்றும் 2வது பெரும் பணக்காரரான கௌதம் அதானியின் அதானி கிரீன் நிறுவனத்தால் இலங்கையில் அமைக்கப்படும் காற்றாலை மின் நிலையங்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.
மன்னார் மற்றும் பூனேரின் ஆகிய இடங்களில், அதானி கிரீன் எனர்ஜி காற்றாலை மின் நிலையங்களை அமைக்க உள்ளது. இலங்கை அமைச்சரவை, அதானி கிரீன் சமர்ப்பித்த திட்டத்தை ஆய்வு செய்யவும், மதிப்பீடு செய்யவும் ஒரு சிறப்பு குழுவை நியமித்தது, இந்த ஆய்வு முடிவுகளுக்குப் பின்பு தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
வடக்கு இலங்கையில் உள்ள இந்த இரண்டு பகுதிகளிலும் 484 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்களை அமைப்பதற்காக 442 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஒப்புதல் பெற்றது.
இதை தொடர்ந்து சிறப்பு குழுவின் ஒப்புதலுக்குப் பின்பு மன்னார் மற்றும் பூனேரி ஆகிய பகுதிகளில் காற்றாலை மின் நிலையங்களை அமைக்கும் திட்டத்திற்கு இலங்கை நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
இந்த மாபெரும் முதலீட்டு திட்டத்தின் கீழ் அதானி கிரீன் எனர்ஜி மற்றும் இலங்கை அரசு மத்தியில் 20 ஆண்டுகளுக்கான மின்சார கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஒப்பந்தத்தின்படி, கிலோவாட் (kWh) ஒன்றுக்கு அதானிக்கு 8.26 சென்ட் வழங்கும்.
இந்த வளர்ச்சியின் அறிவிப்பின் எதிரொலியாக, அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் ரூ.1,790 ஆக உயர்ந்தன. காலை 10:10 மணியளவில் பங்குச்சந்தை குறியீடுகள் 0.29 சதவீதம் சரிந்த நிலையில், அதானி க்ரீன் பங்குகள் சுமார் 0.25 சதவீதம் லாபத்துடன் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications