அதானி குழுமம் இந்தியாவில் பல்வேறு விமான நிலையங்களைக் கைப்பற்றி வரும் நிலையில் தற்போது மங்களூரு விமான நிலையத்தை 50 வருட குத்தகை ஒப்பந்தத்திற்கு ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா-விடம் இருந்து அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது.
அதானி குழுமம் ஏற்கனவே லக்னோ, அகமதாபாத், திருவனந்தபுரம், ஜெய்ப்பூர் மற்றும் குவ்ஹாத்தி ஆகிய 5 விமான நிலையங்களைக் கைபற்றிய நிலையில் 6வது விமான நிலையமாக மங்களூரு விமானத்தைக் கைப்பற்றியுள்ளது.
அதானி குழுமம் சமீபத்தில் தனது கிளை நிறுவனமான அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ (சிறப்புப் பொருளாதாரப் பகுதி) நிறுவனம் கிருஷ்ணாபட்டணம் துறைமுகத்தில் வெற்றிகரமாக 75% பங்குகளைச் சுமார் 12,000 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து தற்போது விமானப் போக்குவரத்துத் துறையிலும் ஆதிக்கம் செலுத்தத் திட்டமிட்டு வருகிறது.
6 முக்கிய விமானநிலையம்
மத்திய அரசு பிப்ரவரி 2019ல் இந்தியாவின் 6 முக்கிய விமான நிலையத்தைத் தனியார்மயமாக்கத் திட்டமிட்டது. இதன் படி லக்னோ, அகமதாபாத், திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், மங்களூரு மற்றும் குவ்ஹாத்தி விமான நிலையங்களைக் குத்தகை விடுவதற்கான பணிகளைத் துவங்கியது.
திருவனந்தபுரம்
திருவனந்தபுரம் விமான நிலையத்தின் குத்தகை ஒப்பந்தத்தில் பல்வேறு அமைப்புகள் குத்தகை கோரப்பட்டதால் பல்வேறு பிரச்சனைகளும், இந்த விமான நிலையைத்தை தனியார்மயமாக்குவதில் சிக்கலும், போராட்டங்களும் வெடித்தது. எனினும் அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி திருவனந்தபுரம் விமான நிலையத்தின் குத்தகை ஒப்பந்தத்தையும் அதானி கைப்பற்றியது.
50 வருடம்
இந்த ஒப்பந்தம் மூலம் அதானி குழுமம் லக்னோ, அகமதாபாத், திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், மங்களூரு மற்றும் குவ்ஹாத்தி விமான நிலையங்களை இயக்கம், மேலாண்மை, விரிவாக்கம் ஆகிய பணிகளை அடுத்த 50 வருடத்திற்கு மேற்கொள்ளப் போகிறது.
வர்த்தகம்
விமானப் பயணிகள் எண்ணிகையும், சேவையும் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் நிலையில் அதானி குழுமம் இப்புதிய வர்த்தகச் சந்தைக்கு நுழைந்து 6 பெரும் விமான நிலையங்களைக் கைப்பற்றியதன் மூலம் மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தை அடையும்.
ஒப்பந்தம்
ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா மற்றும் அதானி குழுமம் மத்தியில் நடந்துள்ள ஒப்பந்தம் மூலம் அக்டோபர் 31 முதல் மங்களூரு விமான நிலையமும், நவம்பர் 2ஆம் தேதி முதல் லக்னோ விமான நிலையமும், நவம்பர் 11 முதல் அகமதாபாத் விமான நிலையமும் முழு கட்டுப்பாட்டிற்குச் செல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதர 3 விமான நிலையங்கள் அதாவது திருவனந்தபுரம், ஜெய்ப்பூர் மற்றும் குவ்ஹாத்தி ஆகியவற்றுக்கான ஒப்பந்தம் செப்டம்பர் மாதம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications