அதானி குழுமம் 4 மில்லியன் டன் திறன் கொண்ட அலுமினியம் சுத்திகரிப்பு ஆலை மற்றும் 30 மில்லியன் டன் திறன் கொண்ட இரும்பு தாது ஆலைகளை அமைக்க ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவின் பாக்சைட் மற்றும் இரும்பு தாது இருப்புகளில் பாதிக்கும் மேல் ஒடிசாவிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒடிசாவில் அமைக்கப்படவுள்ள இந்த அலுமினியம் சுத்திகரிப்பு ஆலை பாக்சைட் இருப்புகள் அல்லது செயல்பாட்டு சுரங்களுக்கு அருகில் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிகின்றது.
மூன்று ஆலைகள்
இது ஸ்மெல்டர் தர அலுமினியத்தினை உற்பத்தி செய்யும் என கூறப்படுகிறது. அதானியின் இந்த முடிவால் இந்தியாவினை அதிக இறக்குமதி செய்வதில் இருந்து குறைத்து, உள்நாட்டு உற்பத்தியினை மேம்படுத்த உதவும்.
கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள தியோஜரில் இரும்பு தாது உற்பத்தி ஆலையும், பத்ரக் மாவட்டத்தில் உள்ள தம்ராவில் பெல்லேட் ஆலையும் அதானி அமைக்கவுள்ளது.
தொடர்ந்து ஒடிசாவில் முதலீடு
இது குறித்து அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி, ஒடிசா எங்களின் முக்கியான மாநிலங்களில் ஒன்று. நாங்கள் இங்கு தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றோம். ஒடிசா அரசிடம் இருந்து எங்களுக்கு தொடர்ந்து நல்ல ஆதரவு கிடைத்து வருகின்றது. நாங்கள் அதனை பாராட்டுகின்றோம்.
அலுமினியம் உற்பத்தி
உலோகங்கள் முக்கியமான ஒன்றாகும். அதில் நம் நாடு நம்பிக்கையுடன் போதிய இருப்புடன் இருக்க வேண்டும். ஆத்ம நிர்பார் திட்டங்கள் உள்பட பல தொலை நோக்கு பார்வையுள்ள திட்டங்களாக உள்ளன. இது வணிகங்களை மேம்படுத்த உதவும். இங்கு புதுபிக்கதக்க எரிசக்திக்கும் ஏற்ற ஒன்றாகும். ஆக பசுமையான எரிபொருளை பயன்படுததி அலுமினியத்தை தயாரிக்க முடியும் என கூறியுள்ளார்.
வேலை வாய்ப்பு
அதானியின் இந்த அலுமினியம் ஆலை மூலம் 7,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதே இரும்பு தாது ஆலையிலும் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்ததில் இந்த ஆலைகள் மூலம் 9300 பேருக்கு மேலாக பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலோகத் துறை
அதானி நிறுவனம் மின் உற்பத்தி, துறைமுகம், விமான நிறுவனம், ஐடி என பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது காப்பர் அலுமினியம், இரும்பு என அடிப்படை உலோகங்களிலும் களமிறங்கியுள்ளது. இது மேற்கோண்டு அதானி குழுமத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
இறக்குமதி குறையும்
ஏற்கனவே ஆதித்யா பிர்லா, வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த துறையில் வெற்றிகரமாக கோலேச்சி வரும் நிலையில், தற்போது அதானியின் நுழைவு இன்னும் போட்டிகரமாக மாற்றியுள்ளது. எனினும் இந்தியாவினை அதிகளவில் இறக்குமதி செய்வதனை குறைக்கும்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications