குஜராத் மாநிலத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு இன்று துவங்கியது, ஜனவரி 10 முதல் 12 வரை என 3 நாள் நடக்கும் இந்த மாபெரும் கூட்டத்தில் உள்நாட்டு நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் என படையெடுத்து வந்து முதலீடு செய்து வருகின்றனர்.
பிரதமரின் சொந்த மாநிலம் என்பதால் வைப்ரென்ட் குஜராத் குளோபல் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, இன்று முழுக்க இக்கூட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துரையாட உள்ளார். பல தலைவர்களை நேரில் சந்தித்துப் பேச உள்ளார்.

இந்த நிலையில் குஜராத் மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு உருவான அதானி குழுமம் இம்மாநிலத்தில் கிரீன் எனர்ஜி மற்றும் புதுப்பிக்கத்தக்க எனர்ஜி துறைகளில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்ய அதானி குழுமம் திட்டமிட்டு உள்ளதாக அதன் தலைவர் கௌதம் அதானி புதன்கிழமை அதிர்வு குஜராத் உச்சி மாநாட்டில் தெரிவித்தார்.
இவருடைய அறிவிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது, தமிழ்நாட்டு முதலீட்டாளர் மாநாட்டில் 42,768 கோடி ரூபாய் என்ற அதிகளவிலான முதலீடு செய்த குழுமத்தில் ஒன்றான அதானி குழுமம், குஜராத்தில் சராசரியாக வருடத்திற்கு 40000 கோடி ரூபாயை அடுத்த 5 ஆண்டுகளுக்கு என மொத்தம் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
அதானி குழுமத்தின் இந்த 2 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் குஜராத் மாநிலத்தில் சுமார் 1 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று கௌதம் அதானி கூறினார்.
மேலும், கடந்த வைப்ரென்ட் குஜராத் குளோபல் உச்சி மாநாட்டில் அதானி குழுமம் ரூ.55,000 கோடி முதலீடு செய்ய உறுதியளிக்கப்பட்ட நிலையில், இதில் அதானி குழுமம் 50,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளது என்றார்.
அதானி குழுமம் தற்போது கட்ச் பகுதியில் கிரீன் எனர்ஜி பூங்காவை 25 சதுர கிமீ பரப்பளவில் 30 ஜிகாவாட் திறனுடன் உருவாக்கி வருகிறது என்றும், இது விண்வெளியில் இருந்தும் தெரியும் வரையில் மிகவும் பிரம்மாண்டமாகக் கட்டுப்பட்டு வருவதாகக் கௌதம் அதானி கூறினார்.
மேலும் குஜராத் குளோபல் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்ட நிலையில் அவரைப் பாராட்டும் விதமாகக் கௌதம் அதானி 2014 முதல், இந்தியா ஜிடிபியில் 185 சதவீத வளர்ச்சியையும், தனிநபர் வருமானத்தில் 165 சதவீத வளர்ச்சியையும் எட்டியுள்ளது, இது புவிசார் அரசியல் மற்றும் தொற்றுநோய் தொடர்பான சவால்களுக்கு மத்தியில் பதிவான மிகப்பெரிய வளர்ச்சி என்றும் அதானி கூறினார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications