ரூ.12 லட்சம் கோடியுடன் மெகா திட்டம் போடும் கௌதம் அதானி!! அம்பானியையே மிஞ்சுவிடுவாரு போல!!

கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி குழுமம், அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் இந்தியாவில் ரூ.12 லட்சம் கோடி வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. உள்கட்டமைப்பு, சுரங்கம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், துறைமுகங்கள் போன்ற துறைகளில் இந்த முதலீடுகள் செய்யப்படும் என்று குழுமத் தலைவர் கௌதம் அதானி அறிவித்துள்ளார்.

"இந்தியாவின் முதலீட்டுச் சாத்தியம் அளப்பரியது. அடுத்த ஆறு ஆண்டுகளில் ரூ 10 முதல் ரூ 12 லட்சம் கோடி வரை முதலீடு செய்வோம்” என அதானி பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா என்ற இலக்குடன் இந்த முதலீடுகளை, அவர் "புதிய சுதந்திரம்" என கூறியுள்ளார்.

ரூ.12 லட்சம் கோடியுடன் மெகா திட்டம் போடும் கௌதம் அதானி!! அம்பானியையே மிஞ்சுவிடுவாரு போல!!

"தற்சார்புக்கான போராட்டம் தொடர்கிறது. பிரதமரின் இந்த அழைப்பு ஒரு புதிய சுதந்திரம்; இதற்காகவே ஒவ்வொரு தொழிலதிபரும், குழுமமும் உழைக்கிறது" என்று அதானி கூறியுள்ளார். ஐஐடி (ஐஎஸ்எம்) தன்பாத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

அதானியின் முதலீட்டுத் திட்டங்களில் தொழில்நுட்பம், எரிசக்தி மாற்றம், துறைமுகங்களும் அடங்கும். தங்கள் குழுமம் உலகின் வேகமாக வளரும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனங்களில் ஒன்றாகும். அடுத்த பத்தாண்டுகளுக்கான இந்தியாவின் இலக்குகளுக்கு ஏற்ப விரிவாக்கத்தைத் திட்டமிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குஜராத்தின் கவ்டா பகுதியில், அதானி குழுமம் 520 சதுர கி.மீ பரப்பளவில் உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பூங்காவை உருவாக்குகிறது. 2030க்குள் இது முழுத் திறனை எட்டும்போது, 30 GW பசுமை ஆற்றலை உற்பத்தி செய்யும். ஆண்டுக்கு 60 மில்லியனுக்கும் மேலான வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் திறன் இதற்கு உண்டு.

குழுமம் சுரங்கத் தொழில், பொருட்கள் பிரிவுகளையும் விரிவுபடுத்துகிறது. பசுமை மாற்றத்திற்கான உலோகங்கள், தயாரிப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது. 21ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் இறையாண்மை, இயற்கை வளங்கள் மற்றும் ஆற்றல் கட்டுப்பாட்டையே சார்ந்துள்ளது என அதானி வலியுறுத்தினார்.

உலகளாவிய பசுமை ஆற்றல் மாற்றம், வரவிருக்கும் பத்தாண்டுகளில் பல டிரில்லியன் டாலர்கள் மதிப்பிலான மிகப்பெரிய தொழிலாக உருவெடுத்துள்ளது. இது மின்சாரம் சார்ந்த உற்பத்தி, பசுமை எஃகு, பசுமை உரங்கள், ஹைட்ரஜன் சூழல் அமைப்புகள் மற்றும் AI, டிஜிட்டல் பொருளாதாரங்களுக்கான முக்கிய உள்கட்டமைப்பை மேம்படுத்தும் என விளக்கப்பட்டது.

அதானி குழுமம் 11 பொதுப் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களைக் கொண்ட ஒரு பன்முகப்படுத்தப்பட்ட அமைப்பாகும் . 62 வயதாகும் கௌதம் அதானி, ஒரு முதல் தலைமுறை தொழில்முனைவோராக, தனது வணிகக் குழுமத்தை $200 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தை எட்ட செய்துள்ளார். ஹிண்டன்பெர்க் போன்ற பல குற்றச்சாட்டுகள் எழுந்த போதும் அவற்றை எல்லாம் தகர்த்து தொடர்ந்து பல துறைகளில் தொழில்களை விரிவாக்கம் செய்து வருகிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+