இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமத்தில் ஒன்றான அதானி குழுமம், அடுத்த 10 வருடத்தில் 7 லட்சம் கோடி ரூபாயை இந்திய உள்கட்டமைப்புத் துறையில் செலவழிக்க உள்ளதாகத் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் தலைமை நீதிபதி DY சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், அதானி - ஹிண்டன்பெர்க் ரிசர்ச் விவகாரம் குறித்த விசாரணையில் ஒரு சில ஊடக அறிக்கைகளை மட்டும் நம்பி இந்த வழக்கில் செபி அமைப்பின் விசாரணையை நீதிமன்றம் சந்தேகிக்க முடியாது என்று கூறியது.
இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து அதானி குழும பங்குகள பெரிய அளவிலான வளர்ச்சி அடைந்து வருகிறது. இதில் முக்கியமாக கௌதம் அதானியின் சொத்து மதிப்பு எப்போதும் இல்லாமல் தினசரி அடிப்படையில் உயர்ந்து வரும் வேளையில் உலகின் டாப் 20 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் நுழைந்தார்.

அது சரி, அதென்ன 7 லட்சம் கோடி ரூபாய் கணக்கு, அமெரிக்காவின் ஷாட் செல்லரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அதானி குழுமத்தின் முன்பு வைத்த குற்றச்சாட்டுகள் மூலம் 7 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பீட்டை அதானி குழுமம் இழந்தது. இதை ஈடுகட்டும் வகையில் இந்க அறிவிப்பு வந்துள்ளது.
அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகேஷிந்தர் சிங், வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில் எவ்விதமான விரிவான விவரங்களை அளிக்காமல் நாங்கள் அதிக முதலீடு செய்ய விரும்புகிறோம் என்று மட்டும் கூறினார். இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் அதானி குழுமப் பங்குகள் முக்கிய டார்கெட் ஆக மாறியுள்ளது.
இந்த 7 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டு மூலம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை மூலம் ஏற்பட்ட பாதிப்பை மொத்தமாகக் களையும் முயற்சியில் கௌதம் அதானி தலைமையிலான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தனது அறிக்கையில் அதானி குழுமம் பல ஆண்டுகளாகப் பங்கு விலை கையாளுதல் மற்றும் கணக்கியல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியது. இதை அதானி குழுமம் ஆரம்பம் முதல் கடுமையாக மறுத்து வருகிறது.
ஜூலை மாதம் பங்குதாரர்களிடம் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தின் போது கௌதம் அதானி பேசுகையில், துறைமுகங்கள், எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு வணிகங்கள் ஆகியவற்றில் பெரும் விரிவாக்க இலக்குகளை அறிவித்தார். அதற்கு முன் அவரது குழுமம், பங்குதாரர்களின் நம்பிக்கையை உயர்த்தவும் கடனை செலுத்த முயற்சி செய்ததோடு, தனது வர்த்தகத்திற்கு முக்கியமில்லாத சில சொத்துக்களையும் விற்பனை செய்தது.
மேலும் அதானி குழுமத்தின் உள்கட்டமைப்பு முதலீடுகள் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த முதலீடுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும். இதோடு அதானி குழுமம் தற்போது அதிகப்படியான தொகையை அண்டை நாட்டு உள்கட்டமைப்புத் துறையில் முதலீடு செய்து வருகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications